55 கடினமல்ல...
ஆனந்தனிடமும், சாந்தாவிடமும் கண்ணீருடன் விடைபெற்றாள் மிதிலா. தனது கைக்குட்டையை அவளிடம் நீட்டினான் ஸ்ரீராம். அதை அவள் மறுக்கவில்லை. அவனிடமிருந்து அதைப் பெற்று, தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். ஸ்ரீராமுடன் பூவனம் வந்து சேர்ந்தாள் மிதிலா. புதுமணத் தம்பதியர்கள் ஆலம் சுற்றி வரவேற்கப்பட்டார்கள்.
மணமகள்கள் இருவரும், விருந்தினர் அறையில் இருக்க வைக்கப்பட்டார்கள்.
"மித்து, எனக்கு செம்ம எக்சைட்டடா" இருக்கு என்றாள் ஊர்மிளா.
அவளைப் பார்த்து செயற்கையாய் புன்னகைத்தாள் பதட்டமாயிருந்த மிதிலா.
அங்கு வந்த நர்மதா,
"நான் டென் மினிட்ஸ்ல வந்து உங்களை லட்சுமணன் ரூமுக்கு கூட்டிகிட்டு போறேன்" என்று ஊர்மிளாவிடம் கூறிவிட்டு, மிதிலாவை ஸ்ரீராமின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அலங்கரிக்கப்பட்திருந்த ஸ்ரீராமின் கட்டிலில் அமர வைக்கப்பட்டாள் மிதிலா.
"குட் நைட் மிதிலா" என்று நர்மதா கூற அவளைப் பார்த்து தலையசைத்தாள் மிதிலா.
மிதிலாவின் இதயம், பந்தய குதிரை போல் கட்டுக்கடங்காமல் ஓடியது. அவளது கவனம், *க்ளிக்* என்ற கதவு திறக்கும் சத்தத்தின் மேல் திரும்பியது. அறையின் உள்ளே வந்து கதவை சாத்தி தாழிட்டான் ஸ்ரீராம். தன் கட்டிலில் அமர்ந்திருந்த மதிலாவை நோக்கி வந்த ஸ்ரீராம்,
"நீ இன்னும் இந்த புடவையை மாத்தலயா?" என்றான்.
ஆம் என்று தலையை அசைத்தபடி தனது பையில் இருந்த இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றாள் மிதிலா. அவள் வருவதற்கு முன், தானும் தனது உடைகளை மாற்றிக்கொண்டான் ஸ்ரீராம். சில நிமிடங்களில் மிதிலாவும் உடை மாற்றிக் கொண்டு வந்தாள். தனது கல்யாண புடவையை அழகாக மடித்து தனது பையில் வைத்துக் கொண்டாள்.
"உனக்கு என் கூட கட்டில்ல தூங்க சங்கடமா இருந்தா, நான் சோபாவில் படுத்துகிறேன்" என்ற ஸ்ரீராமை நம்ப முடியாமல் பார்த்தாள் மிதிலா.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...