56 வலையல்கள்

2.2K 108 23
                                    

56 வளையல்கள்

குளியலறைக்குள், தனது அம்மாவுடன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் லயா.

"எப்படி இந்த கல்யாணத்தை நீங்க நடக்க விட்டீங்க? ஏதாவது செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொன்னிங்க இல்ல?"

"நான் ஏற்பாடெல்லாம் செஞ்சி தான் இருந்தேன். ஆனா, ரஞ்சித் நெருப்பு பத்த வைக்கும் போது ஸ்ரீராம் பார்த்துட்டதால, கடைசி நேரத்தில, நான் சொன்னதை செய்ய மாட்டேன்னு சொல்லிட்டான் ரஞ்சித்."

"ரஞ்சித்தை விட்டா வேற யாருமே உங்களுக்கு கிடைக்காம போயிட்டாங்களா?"

"நீ என்ன நெனச்சிக்கிட்டு இருக்க? அந்தத் தீ விபத்துக்குப் பிறகு, செக்யூரிட்டியை எவ்வளவு டைட்டா ஆக்கிட்டாங்கன்னு தெரியுமா உனக்கு?"

அதைக் கேட்டு வெறுப்படைந்தாள் லயா.

"அது மட்டும் இல்ல. நெருப்பை பார்க்கவிடாம, அந்த பொண்ணை ஸ்ரீராம் எப்படி காப்பாத்தினான்னு என்கிட்ட சொன்னான் ரஞ்சித். இந்த அளவுக்கு ஒரு பொண்ணை நேசிக்கிறவனோட காதல் உனக்கு கிடைக்கும்னு எனக்கு தோணல. அவன் அந்த பொண்ண அவன் மனசோட அடி ஆழத்திலிருந்து காதலிக்கிறான். அப்படிப்பட்ட ஆழமான காதலை மாத்தியமைக்க முடியாது"

அதைக் கேட்டு எரிச்சல் அடைந்தாள் லயா.

"அது எனக்கு தெரியாதா? அவன் யாரை காதலிக்கிறான்னு எனக்கு கவலை இல்ல. நான் அவனை காதலிக்கிறேன். அது தான் எனக்கு முக்கியம் "

"வாயை மூடு லயா. உன்னோட பைத்தியக்காரத்தனத்தை நிறுத்து. ஸ்ரீராம் ஸ்பெஷலானவன் தான். நான் அதை மறுக்கல. அதுக்காக, காதல் என்கிற பேர்ல உன்னோட வாழ்க்கை கெட நான் விடமாட்டேன். உன்னை பத்தி கொஞ்சம் கூட கவலை படாத ஒருத்தனுக்காக காத்திருக்கிறது முட்டாள்தனம்..."

"அம்மா..."

"நான் உனக்கு ஒரு நிலையான வாழ்க்கை கிடைக்கணும்னு நினைக்கிறேன். ஸ்ரீராமுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு இருந்தவன், ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சுகிட்டு இருக்கான். அந்தப் பொண்ணை பொத்தி பொத்தி பாதுகாக்கிறான்... இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா நீ?"

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now