57 அக்கறை

2.1K 104 12
                                    

57 அக்கறை

ஸ்ரீராம் உணர்ச்சிவசப்பட்டு, மிதிலா பார்ப்பது அது தான் முதல் முறை. அவள் தன்னையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததால் புன்னகைத்தான் ஸ்ரீராம்.

அப்பொழுது ஸ்ரீராமுடைய கைபேசி, ஒரு குறுஞ்செய்தியை சுமந்து வந்து குரல் கொடுத்தது. அந்த குறுஞ்செய்தி குகனிடம் இருந்து வந்தது. அதைப் படித்தவுடன், ஸ்ரீராமின் முகத்தில் குறுநகை பூத்தது.

மிதிலா அங்கிருந்து கிளம்ப முற்பட்ட போது,

"மிதிலா, ஒரு நிமிஷம்" என்றான் ஸ்ரீராம்.

தன் புருவங்களை உயர்த்தி, என்ன? என்பது போல் பார்த்தாள் மிதிலா.

"லக்ஷ்மனோட உதடு எப்படி வீங்கிச்சி?" என்று அவள் எதிர்பாராத கேள்வியை வீசினான் ஸ்ரீராம்.

மிதிலாவின் கண்கள் பாப்கார்ன் பொறிவது  போல் பொறிந்தது. இப்படி ஒரு கேள்வியை ஸ்ரீராமிடமிருந்து ஒரு நாள் தான் எதிர்கொள்ள கூடும் என்பதை அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவன் விரித்த வலையில் விழுந்து விடாமல் தன்னை சுதாகரித்துக் கொள்ள முயன்ற மிதிலா,

"அவன் கட்டிலில் இடிச்சிக்கிட்டானாம்" என்றாள் திக்கி திணறி.

"நான் உண்மையான காரணத்தை கேட்டேன்... லட்சுமண் மத்தவங்ககிட்ட சொன்ன பொய்யை இல்ல..." என்று மனதை அள்ளும் புன்னகை சிந்தினான் ஸ்ரீராம்.

"எனக்கு எப்படி தெரியும்?" என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

"உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்"

"இல்ல... எனக்கு தெரியாது" என்றாள்.

"பொய் சொல்ல முயற்சி பண்ணாத. உண்மை என்னன்னு உன் முகமே சொல்லுது"

மென்று விழுகினாள் மிதிலா.

"நீ ஊர்மிளாவை பார்த்து பண்ண சேட்டையை நான் கவனிச்சேன்"

அங்கிருந்து  அவள் ஓடிச் செல்ல நினைத்த போது, தன் கரத்தை நீட்டி அவளை தடுத்தான் ஸ்ரீராம்.

"லட்சுமன் ரொம்ப லக்கி... தன்னோட ஒய்ஃப்கிட்ட இருந்து அப்படி ஒரு காயத்தை வாங்க... இல்ல?" என்றான் வெண்ணை போல் வழுக்கிச் செல்லும் குரலில்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now