58 மனமுவந்த மன்னிப்பா?
தன்னை சுற்றி வீசிக்கொண்டிருந்த காற்று நின்று போனதை போல் உணர்ந்தான் ஸ்ரீராம். சொர்க்கலோகத்து தேவதையை போல் அவனது மனைவி வந்து நின்றால் வேறு எப்படி அவன் உணர்வான்? மெஜந்தா நிற பார்டர் இட்ட வெளிர் மஞ்சள் நிற பட்டுப்புடவையில் கொள்ளை அழகாக இருந்தாள் மிதிலா. அவனது காதருகே தன் விரலை சொடுக்கினான் குகன். தன் கண்களை சுழற்றிய ஸ்ரீராம், தன் இட புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தான்.
"மிஸஸ் எஸ்ஆர்கே சூப்பரா இருக்காங்க இல்ல?" என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டான் குகன்.
அவன் *மிஸஸ் எஸ்ஆர்கே* என்று கூறி இருக்காவிட்டால், அவன் மிதிலாவை புகழ்ந்தது நிச்சயம் ஸ்ரீராமுக்கு பிடித்திருக்காது. மிதிலா, *ஸ்ரீராமின் மனைவி* என்று அவன் கோடிட்டு காட்டியது தான் ஸ்ரீராமை புன்னகைக்க வைத்தது.
மிதிலாவும், ஊர்மிளாவும் அமர வைக்கப்பட்டார்கள். அங்கு வந்திருந்த உறவினர்கள் அவர்களுக்கு நலங்கு வைத்தார்கள். வந்தவர்கள் அனைவருக்கும் அந்த குடும்பத்தின் புது மருமகள்கள் தங்கள் கரங்களால் மஞ்சள், குங்குமம், பூ, பழம், புடவை, அளித்து ஆசி பெற்றனர். வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதிய உணவுக்கு பின்னர், வந்திருந்த அனைவரும் ஒவ்வொருவராய் புறப்பட துவங்கினார்கள், குகன் ஒருவனைத் தவிர. அவனுக்கு பூவனம் வர நேரமே கிடைப்பதில்லை என்பதால், கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அனைவரிடமும் அளவளாவிக் கொண்டிருந்தான்.
பூவனம் பழைய நிலைக்கு திரும்பியது. உடை மாற்றிக் கொள்ள தனது அறைக்குச் சென்றாள் மிதிலா. குகன் கேட்ட ஏதோ ஒரு மின்னஞ்சலை அவனுக்கு அனுப்ப தன் அறைக்கு வந்திருந்தான் ஸ்ரீராம். அவளைப் பார்த்தவுடன் அவனது விரல்கள் தட்டச்சுப் பலகையில் அப்படியே நின்றது. சோபாவில் சாய்ந்து கொண்டு அவளை பார்த்து புன்னகைத்தான். அவள் அவனை கடக்க முயன்ற போது, எழுந்து நின்றான் ஸ்ரீராம்.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...