59 மிதிலாவின் மறு பக்கம்

2K 108 26
                                    

59 மிதிலாவின் மறு பக்கம்

"என் மேல இன்டர்ஸ்ட் இல்லாத மாதிரி பேசாத மிதிலா... நீ என்னோட ஒய்ஃப். நான் யார்கிட்ட பேசுறேங்குறதை பத்தி நீ கவலைப் படனும்... நீ யார்கிட்ட பேசுறேங்குறதை பத்தி நான் நிச்சயம் கவலை படுவேன்... புரிஞ்சுதா உனக்கு?" என்றான் என் பல்லை கடித்துக்கொண்டு ஸ்ரீராம்.

அவனது கோபத்தை பார்த்து திகைப்படைந்தாள் மிதிலா. அவன் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் அவன் சுதந்திரமாய் செய்யலாம் என்று தானே அவள் கூறினாள்...? இவ்வளவு கோபப்பட அதில் என்ன இருக்கிறது? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவனை இவ்வளவு கோபத்துடன் அவள் எப்போதும் பார்த்ததில்லை. அவளது மருண்ட பார்வை, அவனுக்கு சங்கடத்தைத் தந்தது. தான் கொஞ்சம் அதிகப்படியாய் நடந்து கொண்டு விட்டதை புரிந்து கொண்டு, தான் பற்றியிருந்த அவளது கரங்களைப் விடுவித்தான் ஸ்ரீராம். அங்கிருந்து சென்று விட நினைத்த பொழுது, அவன் கையை பிடித்து நிறுத்தினாள் மிதிலா. அவள் பற்றியிருந்த தன் கரத்தை நோக்கி மெல்ல தன் கண்களைத் தாழ்த்திய ஸ்ரீராம், மீண்டும் தன் கண்களை, கலவரத்துடன் காணப்பட்ட அவள் முகத்தை நோக்கி உயர்த்தினான்.

"நான் அந்த அர்த்தத்துல சொல்லல" என்றாள் மென்மையாக.

அவன் செயலுக்கு அவள் பதில் அளித்த விதம் அவனை செயலிழக்கச் செய்தது.

"நான் உங்க சுதந்திரத்துக்கு ஒரு முட்டுக்கட்டையா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, இந்த கல்யாணத்தை ஒரு கால் கட்டா நீங்க நினைக்க வேண்டாம்னு தான். என்னோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி நீங்க நடக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. ஏன்னா, எது சரி எது தப்புன்னு புரிஞ்சிக்க முடியாதவர் இல்ல நீங்க. ஒரு பெஸ்ட் கம்பெனியை ரொம்ப சக்சஸ்ஃபுல்லா நடத்திக்கிட்டு வர்ற ஒரு பிஸினஸ்மேன் நீங்க. உங்களை ஒருத்தர் வழிநடத்த வேண்டிய அவசியம் இருக்கிறதா எனக்கு தோணல. நீங்க எப்படி நடந்துக்கணும்னு நான் ஏன் உங்களுக்கு சொல்லணும்? எதையாவது சொல்லி உங்களை எரிச்சல் படுத்த வேண்டாமுன்னு நெனச்சேன். ஆனா, அதை நீங்க இந்த மாதிரி எடுத்துக்குவீங்கன்னு நான் எதிர்பார்க்கல." என்றாள் மனதை வருடும் வகையில்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now