61 அவன் தான் ஸ்ரீராம்
மாலை / ஆனந்த குடில்
"உள்ள வாங்க மாப்பிள்ளை" என்று வாசலில் வந்து நின்ற ஸ்ரீராமை வரவேற்றார் மிதிலாவின் அப்பா ஆனந்தன்.
தன் மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருந்தான் ஸ்ரீராம். சமையலறையில் சாந்தாவுடன் பேசிக் கொண்டிருந்த மிதிலா, அவர் கூறியதைக் கேட்டு வெளியே ஓடிவந்தாள். உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தான் ஸ்ரீராம்.
"மிதிலா, சாந்தாவை காபி கொண்டுவர சொல்லு" என்றார் ஆனந்தன்.
சரி என்று தலையசைத்துவிட்டு உள்ளே சென்ற மிதிலா, அவள் கூறும் முன்பே பாலைக் காய்ச்ச சாந்தா தொடங்கிவிட்டிருந்ததை கவனித்தாள். ஆனந்தன் கூறியது அவர் காதிலும் விழுந்தது.
"அம்மா, அவர் சக்கரை ரொம்ப குறைச்சலா தான் சேர்த்துக்குவார்" கூறினாள் மிதிலா.
"சரி "
அரை தேக்கரண்டி சர்க்கரை கலந்த காபியை மிதிலாவிடம் கொடுத்தார் சாந்தா. அதைக் கொண்டு வந்து ஸ்ரீராமிடம் கொடுத்தாள் மிதிலா.
"நீங்க இன்னைக்கு லீவுல இருக்கீங்க போலருக்கு" என்றார் ஆனந்தன்
"இல்ல... நான் ஆஃபீசுக்கு தான் போயிட்டு வரேன். ஒரு முக்கியமான டீல் இன்னைக்கு சைன் ஆச்சு" என்று அவருக்கு பதிலளித்தான் ஸ்ரீராம்.
தன் விழிகளை விரித்து ஆச்சரியமாய் அவனை பார்த்தாள் மிதிலா. அதை கவனித்தான் ஸ்ரீராம்.
மிதிலாவின் மாமியார் வீட்டாரிடம் கொடுக்க சொல்லி சில இனிப்பு வகைகளை கொடுத்தார் சாந்தா. அதை பெற்றுக்கொண்டு ஸ்ரீராமுடன் அங்கிருந்து கிளம்பினாள் மிதிலா.
அவர்களது கார், பூவனம் நோக்கி புறப்பட்டது.
"ஸ்டீஃபன் காண்ட்ராக்ட்டை இன்னிக்கு சைன் பண்ணிங்களா?" என்று கேள்வி எழுப்பினாள் மிதிலா.
"ஆமாம்" என்று பதிலளித்தான் சாலையில் தன் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த ஸ்ரீராம்.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...