63 சூழ்ச்சி பொறி
ஸ்ரீராமின் அறைக்கு வந்த மிதிலா, அவன் யாருடனோ கோபமாய் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து நின்றாள். அவன் ஏன் அப்படி கத்திக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை. அமைதியாய் நின்று அவன் பேசுவதைக் கேட்டாள்.
"நீங்க எப்படி இதை நடக்க விட்டீங்க? ஏன் இதைப் பத்தி என்கிட்டே முன்னாடியே சொல்லல?"
"...."
"சரி. நான் உடனே கோயம்புத்தூர் வரேன்" அழைப்பைத் துண்டித்துவிட்டு, மீண்டும் யாருக்கோ அழைப்பு விடுத்தான்.
"குகா, கோயம்புத்தூருக்கு ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணு." என்றான்.
"கோயம்புத்தூருக்கா?இன்னைக்கேவா?" என்றான் குகன்.
"ஆமாம், இன்னைக்கு தான்" என்றான் நிச்சயமாக.
"என்ன ஆச்சி, எஸ்ஆர்கே? எதுக்காக அவ்வளவு அவசரமா நீ கோயம்புத்தூர் போகணும்?"
"நம்ம கோயம்புத்தூர் பிரான்ச் மேனேஜர், நம்ம க்ளையன்ட்கிட்ட இருந்து 2 கோடி ரூபாயை கையாடல் பண்ணிட்டாராம். அதனால, அவங்க நம்ம பிரான்சுக்கு மெட்டீரியல் அனுப்புறதை நிறுத்திட்டாங்களாம். அடுத்த வாரம், ரெண்டு டெலிவரி கொடுக்க வேண்டி இருக்கு. அதோடு மட்டுமில்லாம அந்த பிரான்சுக்கு புது மேனேஜரை அப்பாயிண்ட் பண்ணி ஆகணும்." என்று பிரச்சனையை ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் ஸ்ரீராம்.
பிரச்சனை என்னவென்று மிதிலாவுக்கு புரிந்தது. அவளுக்கு மிகுந்த ஏமாற்றமாகிப் போனது. அவளது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவை அவள் எடுத்திருந்தாள். ஆனால், சந்தர்ப்பம் அவளுக்கு சாதகமாக இல்லை. விதி அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்று புரியவில்லை. இந்த பிரச்சனை எப்படி முடியப் போகிறது என்றும் புரியவில்லை அவளுக்கு.
"நானாவது, பரத்தாவது கோயம்புத்தூர் போறோம். நீ எதுக்குப் போகணும்?" என்றான் குகன்.
"இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்னால கையை கட்டிகிட்டு உட்கார்ந்து இருக்க முடியாது"
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...