64 அடி மேல் அடி
தனது அறையில் லயாவை பார்த்து ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றான் ஸ்ரீராம். அவள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள்? அவன் எதுவும் கேட்கும் முன் அவள் கத்தி கூப்பாடு போட தொடங்கினாள்.
"என்னை விடுங்க... யாராவது என்னை காப்பாத்துங்க..." என்று கதவை ஓங்கித் தட்ட துவங்கினாள்.
அவளின் அந்த செய்கையை பார்த்து முகம் சுளித்த ஸ்ரீராம், அவன் அறையை நோக்கி வந்த சில காலடி ஓசையை கேட்டான் அவன். அவனது சப்த நாடியும் ஒடுங்கிப் போனது, மிதிலாவின் குரலைக் கேட்ட போது. அவளும் திருமண வரவேற்பில் இருந்து வந்து விட்டாள் போல் தெரிகிறது. அவள் அவனுக்காகத் தான் சீக்கிரம் வந்திருக்க வேண்டும். இங்கு இவன், அவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை குறைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் இந்த லயா, அனைத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுவாள் போல் தெரிகிறது.
லயா கதவை திறந்தாள். சொல்ல முடியா குழப்பம் நிறைந்த முகத்துடன், அவனையும், லயாவையும் மாறி பார்த்தபடி தனது குடும்பத்தினர் உள்ளே நுழைவதை கண்டான் ஸ்ரீராம்.
பிரியாவை கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவென்று அழுதாள் லயா. எவர் முகத்தையும் ஏறெடுத்து பார்க்க முடியாமல் தலைகுனிந்தபடி நின்றாள் பிரியா.
"அக்கா, இவர் என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தாரு... நல்ல காலம் அவர் எதுவும் செய்யறத்துக்கு முன்னாடி நீங்க எல்லாரும் வந்துட்டீங்க. இல்லன்னா என்னுடைய நிலைமை என்ன ஆகியிருக்கும்னு என்னால கற்பனை கூட பண்ணி பாக்க முடியல" என்று பிரியாவின் தோளில் சாய்ந்து கண்ணீர் சிந்தினாள்.
அங்கு நின்ற அனைவரும் பேயறைந்தது போல் ஆனார்கள். ஒவ்வொருவரின் முகத்திலும் பயம் தாண்டவமாடியது. அவர்கள் அனைவருக்கும் ஸ்ரீராமை பற்றியும் தெரியும்... லயாவை பற்றியும் தெரியும்... ஆனால், இந்த சூழ்நிலையில் அவர்களால் ஸ்ரீராமின் பக்கம் நிற்க முடியவில்லை.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...