67 முடிந்த கதை...?

2.2K 107 16
                                    

67 முடிந்த கதை

தூக்கத்திலிருந்து மெல்ல கண் விழித்த மிதிலா, தான் ஸ்ரீராமின் கரங்களில் அகப்பட்டு இருப்பதை கண்டாள். ஸ்ரீராம் இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருந்தான். நேற்று நடந்தவை அவள் கண் முன் நிழலாடின. அவள் முகத்தில் மெல்லிய புன்னகை இழையோடியது. ஸ்ரீராம் அவளை காதலிப்பது உண்மை என்றால், அவளது பிரச்சனையை அவன் நிச்சயம் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்குள் பிறந்தது. இன்று இந்த விஷயத்தை எப்படியும் பேசித் தீர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள் மிதிலா.

கடிகாரத்தை திரும்பி பார்த்தவள், அது 6:10 என்று காட்டியதால் மீண்டும் திரும்பி ஸ்ரீராமை அணைத்துக் கொண்டாள், நிறைய நேரம் இருந்ததால். அப்போது,

"குட்மார்னிங்" என்றான் ரகசியமாக, புன்னகையுடன் ஸ்ரீராம்.

அவனை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள் மிதிலா. அப்படி என்றால் அவன் தூங்கவில்லையா? அவளை சுற்றி வளைத்திருந்த ஸ்ரீராமின் கரம் இறுகியது.

"கண் விழிச்ச உடனே, நான் உன்னை கட்டி பிடிச்சிகிட்டிருக்கிறதை பார்த்து நீ எழுந்து ஓடி போயிடுவேன்னு நினைச்சேன். ஆனா நீ என்னை மறுபடியும் கட்டிப்பிடிச்சு ஆச்சரியப்படுத்திட்ட..." என்றான் அவளை கையும் களவுமாய் பிடித்து விட்ட பெருமிதத்துடன்.

அவன் கையில் இருந்து வெளிவர முடியாது என்பதை உணர்ந்து கொண்ட  மிதிலா,

"இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்னு நெனச்சேன். நேத்து ராத்திரி நான் சரியா தூங்கல" என்று சாக்குபோக்கு தேடினாள் மிதிலா.

"அப்படியா? ஆனா ஏன்? நான் தான் உன்னை ஒன்னுமே செய்யலையே... அதோட மட்டும் இல்லாம..." என்னை ஏன் மறுபடியும் கட்டிப்பிடிச்ச என்று நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே என்று அவன் கேட்க முனையும் முன், அவன் பேச்சை துண்டித்து...

"நீங்க செஞ்சீங்க... " என்றாள் மெல்லிய குரலில்.

அமைதியாய் அவளைப் பார்த்தான் ஸ்ரீராம். நான் உன்னைப் ஒன்றுமே செய்யவில்லையே என்று ஸ்ரீராம் கூறியது *உடல்* சம்பந்தப்பட்டது. ஆனால் மிதிலா கூறியது *மனம்* சம்பந்தப்பட்டது.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now