71 தாக்குதல்
நர்மதா ஒருத்தியைத் தவிர ஸ்ரீராமும் மிதிலாவும் எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. ஸ்ரீராம் கேட்டுக்கொண்டபடி யாரிடமும் ஒன்றும் கூறாமல் அமைதி காத்தாள் நர்மதா.
"அக்கா, ராமுவும் மிதிலாவும் எங்க போனாங்க?" என்றான் லட்சுமன்.
"அவங்க சென்னையில தான் இருக்காங்க" என்றாள் நர்மதா.
"அவங்க எங்க இருக்காங்கன்னு உனக்கு தெரியுமா?" என்றார் புஷ்பா.
"தெரியும். ராமு என்கிட்ட சொல்லிட்டு தான் போனான்"
"அதானே பார்த்தேன்... ராமுவாவது, உன்கிட்ட சொல்லாமல் போறதாவது..." என்றார் புஷ்பா கிண்டலாக.
"அவரு மிதிலாவை எங்க கூட்டிக்கிட்டு போனாரு?" என்றாள் ஊர்மிளா.
"கவலைப்படாத ஊர்மிளா, மிதிலா, ராமு கூட தானே இருக்கா... அவ பத்திரமா இருப்பா"
"அவளுடைய சேஃப்டியை பத்தி நான் கவலைப் படல, பாட்டி. ஆனா அவ என்கிட்ட ஒண்ணுமே சொல்லாம போயிட்டா" என்றாள் சோகமாக.
"ஏன்னா, அவங்களுக்கே அதை பத்தி தெரியாது" என்றாள் நர்மதா.
"என்னது...??? அது எப்படி நடந்தது?"
"ராமுவோட பிளான் அவங்களுக்கு தெரியாது"
"ஆனா, எதுக்காக அவரு திடீர்னு பிளான் பண்ணாரு?"
"ஏன்னா, இன்னைக்கு ராமுடைய பர்த்டே"
"ஓஹோ..."
"ஆனா, ராமு எப்பவுமே தன்னுடைய பர்த் டேவை கொண்டாட விருப்பம் காட்ட மாட்டானே..." என்றார் புஷ்பா.
"ஆமாம், இது தான் ஃபர்ஸ்ட் டைம்... அவன் தன்னுடைய பர்த் டேவை கொண்டாடுறது..."
"அது மிதிலாவால தான்... " என்றார் பாட்டி.
"நீங்க சொல்றது சரி பாட்டி. மிதிலா கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும்னு ராமு நினைக்கிறானே, அதுவே ரொம்ப பெரிய விஷயம்..." என்றாள் நர்மதா.
"ஆமாம் கா. நான் கூட ராமுவுடைய நேசரை நெனச்சு, மிதிலாவுடைய ஃப்யூச்சர் பத்தி ரொம்ப கவலைப்பட்டேன்... நல்ல காலம் அவன் மாறிட்டான்"
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...