74 ஏன்?

1.9K 100 13
                                    

73 ஏன்?

தனது பண்ணை வீட்டில் தாக்குதல் நடத்தியவனை கொன்றது யார் என்று ஒன்றும் புரியவில்லை ஸ்ரீராமுக்கு. அதே நேரம், இறந்தவன் தாக்குதல் நடத்தியவனாக இருக்கக்கூடும் என்பதையும் அவன் முழுமனதாய் நம்பவில்லை. ஒருவேளை அது காவல்துறையினரை திசை திருப்புவதற்கான திட்டமாகவும் இருக்கலாம் என்று எண்ணினான் அவன்.

"அவன் எப்படி சார் இறந்தான்?" என்றான் ஸ்ரீராம்.

"அவனுடைய எதிரிங்க யாராவது கொன்னுருக்கலாம்" என்றார் இன்ஸ்பெக்டர்.

"ஓஹோ"

"அவனோட உடம்பு பல முறை கத்தியால குத்தப்பட்டு இருக்கு. அவன் யார் கூடவாவது சண்டை போட்டிருக்கலாம்னு நாங்க சந்தேகப்படுறோம்"

"அது யாருன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா இன்ஸ்பெக்டர்?"

"அவனைப் பத்தி அக்கம்பக்கத்தில் விசாரிச்சோம். ஆனா யாருக்கும் எதுவுமே தெரியல. நீங்க கொஞ்சம் மார்ச்சுவரி வரைக்கும் வர முடியுமா? ஒருவேளை உங்களுக்கு அவனை அடையாளம் தெரிஞ்சா, எங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்"

"நிச்சயம் வறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்க இருப்பேன்" என்று அழைப்பை துண்டித்தான் ஸ்ரீராம்.

"எங்க போறீங்க நீங்க? வீட்டை விட்டு எங்கேயும் போக மாட்டேன்னு சொன்னீங்க இல்ல...?" என்றாள் அப்போது தான் அறைக்குள் நுழைந்த  மிதிலா.

"நம்ம ஃபார்ம் ஹவுசில் அட்டாக் பண்ண ஷூட்டர் இறந்துட்டான்"

"நிஜமாவா?" என்றாள் மிதிலா விழி விரிய.

"ஆமாம். அவனை யாரோ கொலை செஞ்சிட்டாங்களாம்"

"கொலையா? யார் பண்ணது?" என்றாள் அதிர்ச்சியுடன்.

"யாருன்னு தெரியல. அவனை அடையாளம் காட்ட என்னை மார்ச்சுவரிக்கு வர சொன்னாரு இன்ஸ்பெக்டர்"

"அவன் தான் ஷூட்டர்னு  போலீசுக்கு எப்படி தெரிஞ்சது?"

"அவனுடைய கன்னும் நம்ம வீட்டுல இருந்து எடுத்த புல்லட்ஸும் மேட்ச் ஆகுதாம்"

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now