77 தந்தையும் மகளும்

1.8K 99 15
                                    

77 தந்தையும் மகளும்

தரையில் படுத்துகொண்டு விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் காமராஜ். அவரது மனதில் ஓடிக்கொண்டிருந்தது எல்லாம், தனது மகளை பற்றியும் மருமகனை பற்றிய எண்ணங்களே. அப்பொழுது அவர் இருந்த சிறைக் கதவின் இரும்புக் கம்பியை, லத்தியால் தட்டினார் ஒரு  போலீஸ்காரர். அவரைப் பார்த்து எழுந்து அமர்ந்தார் காமராஜ்.

"எழுந்து வெளியில வா. உன்னை பார்க்க ஒருத்தர் வந்திருக்காரு." என்றார் அவர்.

"எனக்கு யாரையும் பார்க்க விரும்பமில்ல" என்றார் காமராஜ் விருப்பமில்லாமல்.

"நெஜமாத் தான் சொல்றியா?"

அவருக்கு பதில் அளிக்காமல் மீண்டும் தரையில் படுத்துக் கொண்டார் காமராஜ்.

"சரி, நீ அவரை பார்க்க விரும்பலன்னு நான் ஸ்ரீராம் கருணாகரன்கிட்ட சொல்லிடறேன்"

சுவற்றில் அடித்த பந்தை போல், துள்ளிக் குதித்து எழுந்து நின்றார் காமராஜ்.

"யாரு? என்னை பார்க்க யார் வந்திருக்கிறதா சொன்னீங்க?" என்றார் நம்பமுடியாமல்

"தொழிலதிபர் ஸ்ரீராம் கருணாகரன். எதுக்காக அவர் உன்னை பார்க்க வந்திருக்கிறார்னு தெரியல" என்று கூறியபடி அவர் அங்கிருந்து கிளம்ப நினைத்த போது,

"சார், என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போங்க..."

"அதானே பார்த்தேன்... பணக்காரனை பார்க்க மாட்டேன்னு யாராவது சொல்லுவாங்களா?" என்று எகத்தாளமாய் கூறியபடி சிறைக் கதவை திறந்து விட்டார் அந்தப் போலீஸ்காரர்.

அவரை பின் தொடர்ந்து வந்தார் காமராஜ். ஸ்ரீராம் தனக்காக *விசாரணை* அறையில் காத்திருந்ததை பார்த்து அவர் ஆச்சரியப்பட்டார். உள்ளே இருப்பவர்களை வெளியில் இருந்து பார்க்க கூடிய, ஆனால் வெளியில் இருப்பவர்களை உள்ளே இருப்பவர் பார்க்க முடியாத, காவலர்கள் மட்டுமே பயன்படுத்த கூடிய விசேஷ அறை அது.

"வணக்கம் மாப்பிள்ளை" என்றார் தன் கரங்களை கூப்பி காமராஜ்.

"எதுக்காக இப்படியெல்லாம் செஞ்சிங்க?" என்று நேரடி கேள்வி கேட்டான் ஸ்ரீராம்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now