79 வெளிநாட்டு நிகழ்ச்சி
குளியலறையிலிருந்து வெளியே வந்த ஸ்ரீராம் மிதிலா தன் கண்களை துடைப்பதை பார்த்து பதற்றம் அடைந்தான்.
"என்ன ஆச்சு, மிதிலா? எதுக்காக அழற?"
"அப்பா எனக்கு ஃபோன் பண்ணி இருந்தார்" என்றாள் அவன் கண்களை பார்த்தபடி.
"ஏதாவது பிரச்சனையா?"
இல்லை என்று தலை அசைத்தாள்.
"அப்புறம் எதுக்கு அழறே?" அவன் குரலில் நிம்மதியின்மை தெரிந்தது.
"நம்ம கல்யாண செலவுக்காக மாமா அவருக்கு பணம் கொடுத்து இருந்தாராம்."
அவனது முகபாவம் மாறியதை கவனித்தாள் மிதிலா.
"ஆனா அது அவருடைய பணம் இல்லையாம்"
வேறு எங்கோ பார்த்துக்கொண்டு நின்றான் ஸ்ரீராம். அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினாள் மிதிலா.
"மிதிலா... மிதிலா நான் சொல்றதை கேளு"
"தேங்க்யூ சோ மச்"
"முதல்ல அழறதை நிறுத்து" அவள் முதுகை லேசாய் தட்டினான்.
தன்னிடம் இருந்து அவளை பின்னால் இழுத்து அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
"அப்பா அந்த பணத்தை உங்ககிட்ட திருப்பிக் கொடுக்க நினைக்கிறார். இன்னைக்கு ஆஃபீசுக்கு வரேன்னு சொல்லிருக்கார்"
"அதை என்கிட்ட அவர் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமில்ல"
"ஆனா அப்பா..."
அவளை மேலும் பேச விடாமல் அவள் பேச்சை தடுத்து,
"அந்த பணத்தை வாங்காம போறதால எனக்கு பிசினஸ்ல நஷ்டம் ஏற்பட போறதில்ல. ஆனா, அவருடைய வாழ்க்கையில் அந்த பணம் நிச்சயம் வித்தியாசத்தை ஏற்படுத்தும். நம்ம கல்யாணத்துக்காக தானே அவர் செலவு பண்ணாரு? அதுக்காக அவரை ஏன் நம்ம கடன் வாங்க வைக்கணும்? அவரும் நம்ம குடும்பம் தானே? அதை அவர் திருப்பிக் கொடுக்க வேண்டாம்னு சொல்லு"
சரி என்று தலை அசைத்தாள். இந்த முறை ஸ்ரீராம் அவளை அணைத்துக்கொண்டான்.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...