🙏இந்த கதை.... நம் கதாநாயகன் கதாநாயகிக்கு சந்தரப்ப சூழ்நிலையால் திருமணமாக...கதாநாயகிக்கு ஏற்கனவே நிச்சியம் செய்த ஒருவன் இவர்களை பழி வாங்கும் கதை... இப்போதைக்கு ஒரு மெல்லிய கோடு மட்டுமே புலப்பட்டு இருக்க... விரைவில் புது களத்துடன்..
♥️ALL in ALL அழகன...
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
🔱யின் ❤All in All ❤அழகனின் அழகி❤
❤பாகம் 1️⃣3️⃣
அன்றைய தினம் காலை நேரம் தமிழழகி மாடியில் இருந்து இறங்கி வர...
செல்வி : என்ன அக்கா மாமா எங்க
தமிழ் : தெரியலை டி ஆளை காணோம்
ரமணி : என்ன மா உன் புருஷனை தேடுறியா
தமிழ் : ...................
ரமணி : அவன் பணம் வசூல் பண்ண போய் இருப்பான்
செல்வி : என்ன பணம்
ரமணி : அது மார்க்கெட்ல இவன் கொஞ்ச பணத்தை வட்டிக்கு விட்டு இருக்கான் வாரத்துக்கு ஒரு முறை காலையிலேயே போய் பணத்தை வாங்கிட்டு வருவான் அதான்
தமிழ் : வட்டிக்கா
ரமணி : ம் ஆமா மா
செல்வி : மாமா ட்ரைலர் கடை தானே வச்சி இருக்காரு
ரமணி : உன் மாமன் பெயர் என்ன தெரியுமா
செல்வி : ம் அழகன் ...திரு அழகன்
ரமணி : ம் ஆனா அவனுக்கு இன்னொரு பெயர் இருக்கு அவன் ஆல் இன் ஆல் அழகன் ......அவன் துணி தைக்கிற ட்ரைலர் கடை வச்சி இருக்கான் ..........மெக்கானிக் ஷெட் வச்சி இருக்கான் ......அப்புறம் கடையில இருந்தபடியே சாரீஸ் சுடிதார் எல்லாம் சேல்ஸ் பண்ணுவான் ஏன் ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை கொல்லி மலைக்கு போய் மளிகை பொருள் வாங்கிட்டு வந்து பேக் பண்ணி கடைகளுக்கு போடுவான் ஆனா யாராவது வாழ வழி இல்லனு சொன்னா போதும்மா அப்படியே அவன் கையில இருக்கறதை எடுத்து குடுத்துடுவான்
செல்வி : ம் மாமா பயங்கரமான ஆளு தான் போல
ரமணி : ஆமா மா அவன் இவ்வளவு வேலையும் செய்ததால் தான் இப்போ இந்த வீடு கடைன்னு அவனுக்கு எல்லாமே சொந்தம் ஆகியிருக்கு