feb 30 நான் ஊருக்கு போறேன்

144 25 20
                                    

🔱யின்

❤All in All
❤அழகனின் அழகி இவள்❤
❤பாகம்...

மறுநாள் காலைப் பொழுது விடிய...ஏனோ திரு அழகன் அவன் படுக்கையிலிருந்து எழாமல் இருந்தவனை பார்த்த தமிழழகி சத்தமின்றி குளிக்கச் சென்றவள் குளித்து முடித்த பிறகு மீண்டும் மாடியில் உள்ள தன் அறைக்குள் நுழைய.... அப்பொழுதும் திரு அழகன் தூக்கத்தில் இருக்க....தமிழ் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தவள் கடிகாரத்தில் நேரத்தை பார்க்க நேரம் சரியாக ஏழு அடித்தும் திரு உறக்கத்தில் இருக்க தமிழ் அவன் அருகில் அமர்ந்தவள்

தமிழ் : திரு.....திரு

திரு அழகன் திடுக்கிட்டு எழுந்தவன்...

திரு : என்னையா கூப்பிட்டீங்க....

தமிழ் : மணி எழாச்சு என்ன இவ்வளவு நேரம் தூங்குறிங்க...

திரு : ஏங்க என்கிட்டயா பேசுறீங்க

தமிழ் : இங்க வேற யாரு இருக்காங்க

திரு : என்னங்க நீங்க அப்ப நேத்து நடந்ததெல்லாம் கனவா

தமிழ் : என்ன கனவா என்ன உளர்றீங்க

திரு : இல்லிங்க நீங்க நேத்து என்கிட்ட பேசாம கோவமா படுத்துட்டிங்க இல்ல...... அதனால நான் நைட் எல்லாம் தூங்கவே இல்ல... உங்கள பார்த்துகிட்டே இருந்தேன்

தமிழ் : நீங்க கல்யாணம் ஆனதில் இருந்து என்னை பாத்துக்கிட்டே தான் இருக்கீங்கன்னு இந்த ஊருக்கே தெரியும் சரி சீக்கிரம் போய் குளிச்சிட்டு கிளம்புங்க

திரு : என்னங்க நீங்க என்கிட்ட சாதாரணமா பேசுறீங்க

தமிழ் : ஏன் உங்க கிட்ட நான் பேச கூடாதா

திரு : இல்ல நேத்து நமக்குள்ள இருந்த பிரச்சனைல்ல நீங்க என்கிட்ட பேசவே மாட்டிங்க ன்னு நினைச்சேன

தமிழ் : சரி இப்போ அத பேச நேரமில்ல.. நீங்க போயி நேரத்தோட கிளம்புங்க

என்று சொன்னபடி தமிழ் கீழே இறங்க.. ஆட்டோக்கார பெண்மணி அனுராதா வாசலில் வந்து நிற்க.. செல்வி அனைவரிடத்திலும் விடைபெற்று அவள் பள்ளிக்கு செல்ல.. ரமணி பாட்டியும் அவர் வீட்டிற்கு செல்ல இருக்க..

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Where stories live. Discover now