பாகம் -5

506 9 0
                                    

அவள் எப்படி இருப்பாள் என்று தெரியாமலே தன் மனதில் ஆயிரகணக்கான ஆசைகளை வளர்த்து கொண்டான்.... இது வரை ப்ரொபோஸ் செய்த பெண்களை ஓட விட்ட ரணம் மிக்க ரண தீரன்... இன்று அவள் பின்னால் ஓடும் மனதை அடக்க முடியாமல், கடிவாளம் போட தெரியாமல் தத்தளிக்கிறான்....
காதல் ஒருவனை எப்படி மாற்றும் என்பதன் தொடக்க நிலையில் இருக்கிறான் நம் தீரன்....
இது வரை பார்த்திடாத ஒருத்தியின் அன்பு தனக்கு வேண்டும், அவளுடன் காதல் மொழி பேச வேண்டும், அவள் மூச்சு படும் தூரத்தில் தான் இருக்க வேண்டும் என்று பலவாறாக எண்ணினான் அந்த கள்வன்....

இங்கு தன் கேபினுக்குள் வந்த கார்த்தி, அவனுக்கு முன்னால் அங்கு வந்து ஜன்னலின் வழியே வெளியே வெறித்து பார்த்து கொண்டிருக்கும் தன் காதல் கன்னியை கண்டான் ....
"பூனை போல் பதுங்கி வந்து அவளை பின்னிருந்து அணைத்தவன் தன் நாடியை அவள் தோளில் வைத்திருந்தான்...
திருடாஆஆ ....ஒரு வித கிறக்கத்தில் அழைத்தாள்
ம்ம்ம்.... சொல்லு டி.... கண்களை மூடியவாறு கேட்டான்....
கல்யாணம் பண்ணிக்கலாம் டா.... எனக்கு உன்கூட இருக்கனும் போல தோணுது.... உனக்கு எல்லாமே செய்யணும்.... உன் கன்னசைவிலே உன் தேவைய தெரிஞ்சிக்கணும்.... உன்ன மாதிரி நிறைய குழந்தைங்க பெத்துக்கணும் டா...

லாஸ்ட் லைன் செமையா இருக்கு டி... அது வேணா பண்ணலாமா.... நீ இப்போ சொன்னா கூட எனக்கு ஓகே தான் அவளை முன்புறம் திருப்பி கூறி கண்ணடித்தான்....

ஏன் டா.... எப்போ பாரு இப்டியே பேசுற.... அதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேனே.... அதெல்லாம் உன் காதுல விழலையா செல்லமாக கோபித்து கொண்டவளின் நெற்றி முட்டினான் கார்த்தி...
சிரித்து கொண்டே இருக்கையில் அமர்ந்தவன் அவளை இழுத்து மடியில் உக்கார வைத்தான்....
நிஷா குட்டி.... உன் திருடனுக்கு மட்டும் அந்த ஆசை லாம் இல்ல னு நினைக்கியா... ம்ம்ம்.... உன்ன என் கண்ணெதிர்க்க வச்சுக்கணும் னு தான் டி நானும் ஆசைப்படுறேன்....ஆனா தீரனுக்கு ஒரு நல்லது நடக்காம நா மட்டும் எப்டி டி சந்தோசமா இருக்க முடியும்... சொல்லு.... அவனுக்கு அரண்மனை மாதிரி வீடு இருந்தாலும், அவனோட அடுத்த தலைமுறை வரை உக்காந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருந்தாலும்  வீட்டுல அவன சாப்டியானு கேக்க ஒரு ஆளு கூட இல்ல டி.... இதெல்லாம் இருந்து என்ன பயன்.... சொல்லு.... என்னால அவன இப்டி பாக்க முடியல டி.... அவனுக்கு எத்தனையோ பொண்ணுங்க ப்ரொபோஸ் பண்ணிருக்காங்க.... ஆனா எல்லாருமே அவனோட அழகு,பணம்,புகழ்,வசதி இதெல்லாம் தான் பாக்குறாங்க.... அவங்க  பண்றது காதலே இல்ல டி.... அதனால தான் அப்டி வர்ற பொண்ணுங்கள அவன் தொரத்துறதுக்கு முன்னாடி நா தொரத்திடுறேன்.... கொஞ்சோ பொறுத்துக்கோ டி... அவனுக்குனு ஒரு வாழ்க்கை கெடச்சதும் அவன் சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம்.... ம்ம்ம்.... ஓகே வா பேபி

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now