பாகம் =19

379 6 24
                                    

என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா நிலா என தீரன் கேட்டதும் அவனை விழி விரித்து பார்த்தாள் நிலா....

தண்ணீர் பைப்பை குளோஸ் செய்தவள் "சார்.... என்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.... தெரிஞ்சும் உங்க வாழ்க்கைல வந்து உங்க வாழ்க்கைய நாசமாக்க நா விரும்பல.... தயவு செஞ்சி என்ன நினைக்காம உங்களுக்குனு ஒரு வாழ்க்கைய தேடிக்கோங்க... ப்ளீஸ் என கூறியவள் அவன் முகத்தை பார்க்காது வேகமாக அந்த அறையை விட்டு சென்றாள்.... போகும் அவளை ஏக்க பார்வையோடு பார்த்தான் தீரன்....

விழியில் தன் அனுமதி இல்லாமல் வழியும் கண்ணீரை துடைத்தவள் ரெஸ்ட் ரூமிற்கு சென்றாள்.... அங்கு உள்ள கண்ணாடியை பார்த்தவள்.... தன் முகத்தை பார்த்து " இந்த முகம் அவரு பக்கத்துல நிக்க கூட தகுதி இல்லாதது.... குறைகளே வாழ்க்கையா இருக்குற என்ன ஏன் அவரு நேசிக்கிறாரு.... என்னால அவருக்கு நிறைய அசிங்கங்கள், அவமானங்கள் வர வாப்பிருக்கு.... என்னால அவருக்கு ஒரு கொழந்தைய கொடுக்க முடியுமானு எனக்கு தெரியல என புலம்பும் போதே அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.... யாருமே விரும்பாத என்ன இவரு விரும்புறாரு.... என் மனசும் அவர்கிட்ட போக துடிக்குது.... ஆனா கண்டிப்பா அந்த தவற நா செய்ய மாட்டேன்.... அவரு நல்லா இருக்கனும் என கூறிக்கொண்டே முகத்தை கழுவினாள் நிலா

***************
இரவு உணவை உண்டு விட்டு மாடியில் சிறிது நேரம் வானில் நிலாவை பார்த்த படியே நின்றாள் நிலா....

நிலா மா.... என குரல் கேக்க.... திரும்பி பார்த்தவள் முன் நின்றார் கணேசன்

அப்பா.... வாங்க பா... நீங்க தூங்கலையா என நிலா கேக்க

நான் தான் அத கேக்கணும் நிலா மா.... என்னாச்சி.... ஏன் ஒரு மாதிரி இருக்க என  அவளின் அப்பா கேக்க

எனக்கு என்ன பா.... நா நல்லா தான இருக்கேன் என வானின் நிலாவை விட பிரகாசமாக தன் முகத்தை தன் அப்பாவிடம் காட்டினாள் நிலா

நல்லா நடிக்கிற நிலா மா என மனதுள் நினைத்தவர் " சிரித்து கொண்டே தன் மகளை அணைத்து கொண்டார்.... தன் தந்தையின் நெஞ்சில் சாய்ந்தவள் தனக்குள் பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்தினாள்.... தன் மகளின் தலையை வாஞ்சையாய் தடவி விட்டவர் "ஒரு நிகழ்வ மட்டுமே வச்சி எல்லாத்தையும் முடிவு பண்ண கூடாது நிலா மா.... இந்த உலகம் எவ்ளோக்கு எவ்ளோ மோசமானதோ அதே மாதிரி அவ்ளோக்கு அவ்ளோ அழகானதும் கூட.... காரணம் இல்லாம யாரையும் கடவுள் படைக்கிறது இல்ல.... நல்லவங்களுக்கு சோதனை வர்றது இயல்பு தான்....
இந்த உலகத்துல யாருமே நமக்காக இல்ல னு நினைக்கிறோம்.... ஆனா யாரோ ஒருத்தருக்கு நாம தான் உலகமே என தன் தந்தை கூறியதும் நிமிர்ந்து அவரை பார்த்தாள் நிலா....
அவளை அங்குள்ள ஒரு திட்டில் அமர வைத்தவர் அவள் அருகில் அவரும் அமர்ந்தார்.... ஆமா நிலா மா.... இன்னைக்கி வயல் ல வேலைய முடிச்சிட்டு வந்துட்டு இருந்தேன்.... அப்போ   மேல தெரு நாராயணன் அண்ணன் பையன பாத்தேன்.... அவனுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு மா.... லவ் மேரேஜ்ஜாம்.... அவன் கூட பேசிட்டு இருக்கும் போது தான் சொன்னான்.... உன் மனைவி எங்க பா னு கேட்டதுக்கு அதோ அங்க வராங்க பாருங்கனு சொன்னான்.... திரும்பி பார்த்தா உண்மையாவே அதிர்ச்சி ஆகிட்டேன் மா....
பொண்ணு அவ்ளோ ஒரு கருப்பு, வெள்ளை நிறத்த ஒரு இடத்துல கூட பாக்க முடியல.... பல்லு முன்னாடி நீண்டுட்டு இருந்திச்சி.... நல்லா இருக்கீங்களா னு என்கிட்ட அந்த புள்ள கேட்டிச்சி.... பல்லு ல அங்க அங்க கொஞ்சோ மஞ்சள் கறை... கண்ணாடி போட்ருந்திச்சி.... என் கண்ணுக்கு அந்த புள்ள அவ்ளோ அழகா ஒன்னும் தெரியல.... ஆனா பாரு எப்டி அந்த பொண்ணு மேல லவ் வந்திச்சி.... அப்பாவே லவ் பத்தி பேசுறாங்களே னு நினைக்காத நிலா மா.... எல்லார் கண்ணுக்கும் நாம அழகா தெரிய மாட்டோம்.... அதான் சொல்றேன்...
அந்த பையன் அந்த பொண்ணோட மனச பாக்குறான்.... அதான் அவன் கண்ணுக்கு அவ்ளோ அழகா அந்த பொண்ணு தெரியுறா.... அந்த புள்ள வயல கொஞ்சோ பாத்துட்டு வரேன் னு சொல்லிட்டு போச்சி... அப்போ நா அந்த தம்பி கிட்ட கேட்டேன்.... எப்டி பா.... லவ் மேரேஜ் னு...
யாருகிட்டயும் இல்லாத ஒரு அழக அவ கிட்ட பாத்தேன் னு சொன்னா.... அவன் பாத்த அழகு முகத்துல இல்ல.... மனசுல இருக்கு.... மனச பாக்குறவனுக்கு கருப்பு வெள்ளை, அழகு, அசிங்கம் னு எதுவுமே தெரியாது நிலா மா.... அந்த புள்ள வயல பாத்துட்டு வந்ததும் தூக்கிட்டு நடந்தான் அந்த புள்ளைய.... கொஞ்சிட்டே போறான்.... இது தான் காதல் நிலா மா.... எப்பவுமே ஒரு விஷயத்த மட்டும் வச்சி முடிவு பண்ண கூடாது என கூறினார்....

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now