பாகம் 18

351 7 29
                                    

என்ன தான் மனதில் ஆயிரம் கவலைகள், கஷ்ட்டங்கள் இருந்தாலும்.... சொல்லி அழ ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்.... எங்கே நாம் அழுதால் மொத்த குடும்பத்தின் சந்தோஷமும் போய் விடுமோ என்ற நினைப்பில் கஷ்ட்டங்களை மறைத்தாள் நிலா....

வழக்கத்திற்கு மாறாக மாறன் இன்று வீட்டிற்கு சீக்கிரமாகவே வந்து விட்டான்... வீடு அமைதியாக இருப்பதை பார்த்து " அம்மா சமையல் செய்து கொண்டிருக்கிறதை அறிந்த மாறன்.... என்ன மா... நிலா வீட்டுல இல்லையா.... வீடே அமைதியா இருக்கு என ஷூவை கழட்டி கொண்டே கேக்க.... இவ்ளோ நேரம் இங்க தான் பா இருந்தா.... இப்போ தான் ரூம்க்கு போறா என கூறினார் தேவி....

சாப்டு மாறா என கூற.... கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிடுறேன் மா.... என கூறி தன் அறைக்குள் சென்று கதவை லாக் செய்தான்.... வேகமாக உடையை மாற்றிய மாறன் ஸ்ருதிக்கு கால் செய்தான்....

மாறனிடம் இருந்து அழைப்பு வந்ததும்.... சிரித்து கொண்டே அட்டன் செய்தாள் ஸ்ருதி.... " சொல்லுங்க ஆபிஸர் என கூற

உம்மா உம்மா உம்மா என முத்தங்களை வாரி இறைத்தான் மாறன்

அதில் கன்னம் சிவந்த அவளோ " அச்சோ.... என்ன பண்ற டா.... முரடா போதும் என சிணுங்கி கொண்டே கூற

உனக்கு போதும்.... எனக்கு வேணுமே என சிணுங்கி கொண்டே கூற

என்ன ஆபிஸர் ரொமான்ஸ் மூடுல இருக்கீங்க போல என கேக்க

ஆமா டி.... உன்ன வேற சரியாவே கவனிக்க முடியல.... பாப்புகுட்டி உன் முரடன் மேல உனக்கு கோவம் வரலையா என மாறன் கேக்க

இல்ல டா.... உன் மேல எனக்கு ஏன் கோவம் வர போகுது.... உன் வேலைய பத்தி தான் எனக்கு தெரியுமே என கூறினாள்

இல்ல டி.... எல்லா பொண்ணுங்களுக்கும் தன்னோட லவ்வர் கூட இப்டிலாம் இருக்கனும் னு தோணுமே.... அதான் கேட்டேன்

ம்ம்ம் தோணுது டா.... வாரத்துல ஒரு நாளாவது உன்ன மீட் பண்ணனும் னு தோணுது.... ஆனா என்ன பண்ண.... என் ஆபிஸர் தான் வேலனு வந்துட்டா என்ன கண்டுக்க மாட்டேன்றாரே என ஸ்ருதி கூறினாள்

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now