பாகம் 21

370 4 29
                                    

தீரன் அவன் அறையில் தன் மொபைலில் நிலாவை பார்த்து கொஞ்சி கொண்டிருந்ததை பார்த்து அந்த உருவம் கண்ணில் வெறியுடன் பார்த்து விட்டு வந்த தடம் தெரியாமல் மறைந்தது....

சார் ஷாட் ரெடி என கூறவும்"யாஹ்....ஐ ஆம் கம்மிங் என கூறியவன் அவளின் புகைப்படத்திற்கு இச்சு வைத்து ad பார்க்க சென்றான்...

********
இங்கு கணேசன் வேலையை முடித்து வீட்டிற்கு வந்தவர் கை காலை கழுவி விட்டு ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தார்.... தேவி கொஞ்சோ தண்ணி கொண்டு வா என கூற.... நிலா வந்து தண்ணி கொடுத்தாள்....

என்ன மா இங்க இருக்க.... காலேஜ்க்கு போகலையா என நீர் அருந்திகொண்டே கேக்க.... அவளோ இல்ல பா .... அது வந்து என கூற.... ரம்யா தன் அறையில் இருந்து வெளியே வந்தாள்....

வா மா.... தல வலி இப்போ எப்டி இருக்கு.... என தேவி கேக்க

பரவாயில்லை மா என ரம்யா கூறினாள்

ரம்யாவை குழப்பமாக பார்த்த கணேசன் "தேவி யாரு இந்த பொண்ணு என கேக்க

சொல்றேங்க என கூறியவர் "நிலா.... ரம்யாக்கு சாப்பாடு குடு என கூற

அவள் பேர் தெரியாத நிலாவோ "ரம்யா யாரு மா என கேக்க

பேர் தெரிஞ்சிக்காம தான் இருந்தியா.... இந்த பொண்ணு பேரு தான் ரம்யா என கூறி தன் கணவரை "நீங்க உள்ள வாங்க என அழைத்து கொண்டு உள்ளே சென்றார்

வாங்க ரம்யா கா.... சாப்பிடலாம் என நிலா கூற....

இல்ல நிலா எனக்கு வேண்டா என ரம்யா சொல்ல

என் பேர் உங்களுக்கு எப்டி தெரியும் என ஆச்சரியமாக கேக்க

இப்போ தான அம்மா உங்கள கூப்டாங்க என சொல்ல

ஓஹ் ஆமா ல என சிரித்து கொண்டே சொல்லி.... ஆனா அக்கா.... நீங்க என்ன பேர் சொல்லி கூப்டுறது புடிச்சிருக்கு.... ஆனா ஏன் நீங்க வாங்க போங்க னு சொல்றிங்க.... நீ வா போ னு சொல்லுங்க என கூற

சரி என்றவள்.... அப்போ... அக்கா இங்க வா னு தான் நீயும் கூப்பிடனும் சரியா என கேக்க....

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now