2 பிரச்சனையில் தில்லைராஜன்

1.6K 77 4
                                    

2 பிரச்சனையில் தில்லைராஜன்

"இந்த பையனை நம்ம என்ன செய்யறது? நம்ம சொல்ற எதையும் இவன் கேட்கவே மாட்டேங்கிறானே..." வருத்தப்பட்டார் மணிமாறன்.

"அவனுக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்ச பிறகு, நம்ம ஏன் திரும்பத் திரும்ப அவனை தொல்லை பண்ணணும்?" கேள்வி எழுப்பினார் மின்னல்கொடி.

"நீ என்ன பேசுற மின்னல்?"

"கல்யாணம்கிறது வியாபாரம் கிடையாது. அது லைஃப்டைம் கமிட்மென்ட். யாரையும் வற்புறுத்தி அதுல பிடிச்சி தள்ள முடியாது... முக்கியமா நம்ம மூத்த பிள்ளையை. அவனுக்கு பிடிக்காத எதையும் நம்ம ஃபோர்ஸ் பண்ணி செய்ய வைக்க முடியாது. அவன் பிடிவாதம் உங்களுக்கு தெரியாதா?"

ஆமாம் என்று தலையசைத்தார் மணிமாறன்.

"எதுக்காக குமரேசன் அண்ணன் மலர் கிட்ட அவர் பேசாம, கீர்த்தியை பேச விட்டாரு?" என்றார் அலுப்புடன் மின்னல்கொடி.

"ஆமாம், அந்த அந்த மடையன் எவ்வளவு பெரிய முட்டாள்தனத்தை பண்ணி வச்சிருக்கான் பாரு..."

"அவர் பேசியிருந்தா, அவர் வயசுக்கு மரியாதை கொடுக்கணும்னு நினைச்சு, கொஞ்சம் தன்மையா பேசி இருப்பான் மலரவன்... அவரு சொதப்பிட்டாரு" என்றார் அதிருப்தியுடன்.

"அந்தப் பொண்ணு வேற அவன் கிட்ட என்ன பேசினான்னு தெரியலயே..." என்றார் மணிமாறன்.

"சீக்கிரமே குமரேசன் அண்ணன் உங்களுக்கு ஃபோன் பண்ணுவாரு பாருங்க"

"பண்ணட்டும் பாக்கலாம்"

குமரேசன் ரெசிடென்சி

கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி. அவள் வாழ்நாளில் எந்த ஆண்மகனும் அவளிடம் இவ்வளவு மோசமாய் பேசியதில்லை. அவன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் மலரவன்? ஒரு பெண் பிள்ளையிடம் எப்படி பேச வேண்டும் என்பது கூடவா அவனுக்கு தெரியாது? மரியாதைகெட்ட மடையன்...! அவளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவன் எப்படி கூறலாம்? அவளை நேரில் பார்க்காமலேயே எப்படி அவன் அந்த முடிவுக்கு வரலாம்? அவளை நேரில் பார்த்திருந்தால், அவளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவன் கூறி விட முடியுமா? நிச்சயம் முடியாது. அவளிடம் தவறாய் நடந்து கொண்டதற்காக நிச்சயம் வருத்தப்படுவான், என்று எண்ணினாள் கீர்த்தி, மலரவனை பற்றி முழுதாய் தெரியாமல்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now