59 அறையும் முத்தமும்

1.2K 73 9
                                    

59 அறையும் முத்தமும்

"நீங்க தான் மலரவன் ஆச்சே" என்ற அவளை தன்னை நோக்கி இழுத்த மலரவன்,

"அதுக்கு என்ன அர்த்தம்? இப்போ நான் மலரவனா இருந்தா என்ன?" என்றான் அவளது காதோர கூந்தலை ஒதுக்கிவிட்டவாறு.

"அப்படின்னா, எல்லா பிரச்சினையையும் சரி செய்றவர்னு அர்த்தம்" என்றாள் அவனது காலரை பற்றி கொண்டு.

"அப்படியா?"

"அப்படித் தான்" என்று தன் நெற்றியை அவன் நெற்றியோடு மோதினாள்.

"ஆனா, இந்த தடவை எல்லா கிரெடிட்டும் என்னை மட்டுமே சேராது. மகிழன் ரொம்ப ஸ்மார்ட்டா நடந்துக்கிட்டான். அதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்ல. அவன்தான் குமரேசனோட மேனேஜர் ரஞ்சித்தை, அவருக்கு எதிரா திருப்பி விட்டது. அது தான் நம்ம பக்கத்தை ரொம்ப ஸ்ட்ராங்கா மாத்திச்சி"

"அவர் உங்களோட தம்பியாச்சே... இந்த மாதிரியான திறமை எல்லாம் தன்னோட அண்ணன் கிட்ட இருந்து அவர் கத்துக்கிட்டு இருப்பாரு"

"என்ன விஷயம், இன்னைக்கு என் பொண்டாட்டி என்னை ரொம்ப ஓவரா புகழறா?"

"புகழக் கூடாதா?"

தன் புருவம் உயர்த்தினான் மலரவன்.

"இப்படிப்பட்ட புகழ்ச்சிக்கெல்லாம் நீங்க தகுதியானவர் தானே?"

"அது எப்படி எனக்கு தெரியும்?"

"ஆனா எனக்கு தெரியும்"

"என்ன தெரியும்?"

"உங்களுக்கு அதுக்கு தகுதி இருக்கு. உங்களுக்கு இல்லன்னா, வேற யாருக்கு இருக்க போகுது? நீங்க செஞ்சிருக்கிற விஷயமெல்லாம் வேற யாராலயுமே செய்ய முடியாது"

"அதனால?"

"என்னோட மரியாதையை ஏத்துக்கோங்க"

"ஏத்துக்கிட்டேன். சந்தோஷமா?" குறுநகை புரிந்தான் மலரவன்.

ஆமாம் என்ற தலையசைத்த பூங்குழலி,

"வாழ்க்கை கணிக்கவே முடியாத புதிர்ல?" என்றாள்.

ஆமாம் என்று தலையசைத்தான் மலரவன்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now