48 திருட்டு ஆட்டம்

1.2K 69 8
                                    

48 திருட்டு ஆட்டம்

எம்எம் நிறுவனம்

மித்திரனின் அறைக்குள் மலரவன் நுழைந்த மறுகணமே, அவன் மீது கேள்வி கணைகளை தொடுக்க துவங்கினான் மித்திரன். அவன் அதற்காகவே காத்திருந்ததாக தெரிகிறது.

"என்ன ஆச்சி மலரா? எதுக்காக உன்னோட லண்டன் ட்ரிப்பை நீ கேன்சல் பண்ண? பூங்குழலியோட லண்டனுக்கு போகணும்னு நீ எவ்வளவு ஆசையா காத்துக்கிட்டு இருந்த? இப்போ என்ன ஆச்சு? இந்த ட்ரிப்பையே கேன்சல் பண்ற அளவுக்கு அப்படி என்ன குடி மூழ்கி போற பிரச்சனை?" நிறுத்தாமல் கேட்டு முடித்தான் மித்திரன்.

"ஆமாம் மித்ரா, குடி முழுகுற பிரச்சனை தான்" என்றான் சீரியஸாக.

"என்னாச்சு மலரா, எதுக்காக இவ்வளவு டென்ஷனா இருக்க?" என்ற மித்திரனும் டென்ஷன் ஆனான்.

"என்னோட லாயர் பூபதி கிட்ட இருந்து நம்ப முடியாத ஒரு மெசேஜ் கிடைச்சிருக்கு"

"என்ன மெசேஜ்?"

"உனக்கு கைலாசத்தை ஞாபகம் இருக்கா?"

"கைலாசம்... கைலாசம்..." என்று நினைவு கோர முயன்றான் மித்திரன்.

"தில்லை அங்கிள் அவருக்காக தான் ஷூரிட்டி கையெழுத்து போட்டாரு..." என்றான் மலரவன்.

"ஆமாம், இப்போ எனக்கு ஞாபகம் வந்திருச்சு.  சரி அவருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"தில்லை அங்கிளோட வீட்டை, நாளைக்கு கைலாசம் தன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ண போறாரு"

"என்ன்னனது???? அது எப்படி நடக்க முடியும்?" என்றான் மித்திரன் அதிர்ச்சியுடன்.

"எனக்கும் ஒன்னும் புரியல. பேங்க் ரூல்ஸ் படி, ஜப்தி செஞ்ச வீடு, மக்களுக்கு முன்னிலையில ஏலம் விடப்படணும். ஆனா இந்த கேஸ்ல அப்படி எதுவும் நடக்கல. ஏன்? எனக்கு என்னமோ கைலாசம் மேல தான் சந்தேகமா இருக்கு. தில்லை அங்கிளை அவர் நம்ப வச்சு ஏமாத்தி இருக்கணும்" என்றான் கோபம் கொந்தளிக்க.

"அது எப்படி நடந்திருக்கும்னு நினைக்கிற?"

"எனக்கு தெரியல. என்னால எந்த முடிவுக்கு வர முடியல. அதனால தான் உன்னை பார்க்க வந்தேன். கைலாசம் வீட்டை தன் பேர்ல ரிஜிஸ்டர் பண்றதுக்கு முன்னாடி, உண்மையான பிரச்சனை என்னன்னு நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிஞ்சாகணும். நம்ம இதை நடக்க விடக்கூடாது. தில்லை அங்கிள், கைலாசத்துக்காக ஷூரிட்டி கையெழுத்து போட்ட பேங்கை பத்தின டீடெயில்ஸ் எல்லாம் எனக்கு வேணும். சிவகாமி ஆன்ட்டி சொன்னதை வச்சு பார்க்கும் போது, கைலாசத்து கிட்ட சல்லி காசு கூட இருக்க முடியாது. அதனால தான் அவருக்கு ஹெல்ப் பண்ணனும்னு தில்லை அங்கிள் நெனச்சிருக்காரு. கைலாசம் பேங்க்ல வாங்குன லோனை கூட ஒழுங்கா கட்டல. அதனால தான் தன்னுடைய சொத்தையும்,  உயிரையும் தில்லை அங்கிள் இழந்தாரு. அப்படி இருக்கும் போது, பல கோடி மதிப்பு இருக்கிற தில்லை அங்கிள் வீட்டை வாங்குற அளவுக்கு கைலாசத்துக்கு பணம் எங்கிருந்து வந்தது?"

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now