8 அதிர்ச்சி

1.1K 76 9
                                    

பாகம் 8 அதிர்ச்சி

சிவகாமி கேட்டுக்கொண்டபடியே, அனைத்து சம்பிரதாயங்களும் அடுத்த மூன்று நாட்களில் முடித்துக் கொள்ளப்பட்டன. தில்லைராஜனின் குடும்பம், இரட்டைஏரியில் இருந்த வீட்டிற்கு குடி பெயர்ந்தார்கள். அவர்களை அங்கு குடியமர்த்த மணிமாறனின் குடும்பத்தாரும் உடன் சென்றார்கள். அந்த வீடு, அவர்களது பழைய வீட்டை ஒப்பிட்டு பார்க்கும் போது, நாளில் ஒரு பங்கு தான் இருந்தது. அது அவர்களுக்கு வருத்தத்தை தந்தது. எப்படி வாழ்ந்த குடும்பம் அது...!

சிவகாமியுடன் சேர்ந்து, துணிமணிகளை அலமாரியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த தில்லைராஜனின் அக்கா, வடிவுக்கரசியிடம் வந்த மின்னல்கொடி,

"நீங்க ஈரோட்டுக்கு திரும்பி போக போறீங்களா?" என்றார்.

"நான் எப்படி இவங்களை தனியா இங்கே விட்டுட்டு போறது? எனக்கு திரும்பி போற எண்ணமே இல்ல. ஈரோட்டில் இருக்கிற என்னோட வீட்டை கூட வித்துடலாம்னு யோசிச்சுக்கிட்டு  இருக்கேன்"

"ஆமாம் மின்னல். அக்கா எங்க கூட இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுது." என்றார் சிவகாமி.

"ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு என்ன வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் எங்களுக்கு கால் பண்ணுங்க" என்றார் மின்னல்கொடி வடிவுக்கரசியிடம்.

"நிச்சயமா செய்றேன்... நீங்க தான் எங்களுக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை. சிவகாமிக்கும் பூங்குழலிக்கும் உங்களோட சப்போர்ட் கெடச்சது ரொம்ப பெரிய விஷயம்"

"எனக்கு தெரியுங்க. அவங்களுக்கு நாங்க இருக்கோம். நீங்க கவலைப்படாதீங்க" என்றார் மின்னல்கொடி சிவகாமியை பார்த்தபடி.

"நீங்க மட்டும் இல்லன்னா நாங்க என்ன ஆகிருப்போம்னு தெரியல. நீங்க இருக்கிற தைரியத்துல தான் என்னோட மூச்சே சீறா ஓடிக்கிட்டு இருக்கு" என்றார் சிவகாமி.

"கவலைப்படாத சிவா. செய்ய வேண்டியதை நம்ம சீக்கிரமே செய்யலாம்" பூங்குழலியை பார்த்தபடி கூறினார் மின்னல்கொடி. அவரது வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட பூங்குழலி, தலை குனிந்து கொண்டாள்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now