25 திருமணம்

1.3K 77 9
                                    

25 திருமணம்

மலரவனின் மனம் கலவரப்பட்டது. அவனுக்கு மகிழனின் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாவிட்டாலும், தன் கண் முன்னாலேயே கண்டாலும், அவனால் ஏனோ நடந்தவற்றை நம்ப இயலவில்லை. *தீர விசாரிப்பதே மெய்* என்று நம்பியவன் அவன். ஆனால், அதற்கு குமரேசன் குடும்பத்தினர் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அவர்கள் மீது எந்த தவறும் இல்லாவிட்டால், அவர்கள் ஏன் இதை விசாரிக்க அனுமதிக்கவில்லை? அவர்களது நடவடிக்கை எதுவும் உண்மை போல் தோன்றவில்லையே...! கைபேசியை எடுத்து மித்திரனுக்கு அழைப்பு விடுத்தான். அந்த அழைப்பை ஏற்ற மித்திரன், மலரவன் எதுவும் கூறுவதற்கு முன்,

"இங்க என்ன நடக்குது மலரா? கண்ட கருமத்தை எல்லாம் நான் கேள்விப்படுறேனே..." என்றான் கவலையோடு.

"ஆமாம். அந்த கருமம் தான் இங்க நடந்தது" என்றான் தாழ்ந்த குரலில்.

"என்ன சொல்ற? அப்படின்னா அதெல்லாம் உண்மை தானா?"

"எனக்கு ஒன்னும் புரியல, மித்ரா"

"என்ன நடந்துச்சு?"

அங்கு நடந்தவற்றை அவனிடம் கூறினான் மலரவன். மித்திரன் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல், குழப்பமும் அடைந்தான்.

"நான் மகிழனோட ஃபிரண்டை பாக்கணும்" என்றான் மலரவன்.

"யாரு, ராகேஷையா?"

"ஆமாம். மகிழன் சொல்றது உண்மையா இல்லையான்னு அவனால தான் நமக்கு சொல்ல முடியும்"

"ஒருவேளை, மகிழன் அப்பாவியா இருந்தா நீ என்ன செய்வ?"

"நிச்சயம் இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன். குமரேசன் குடும்பத்தை போலீஸில் ஒப்படைப்பேன்" என்றான் கோபத்தோடு.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ராகேஷ் வெளியே போறதை நான் பார்த்தேன்"

"உன்கிட்ட அவன் ஃபோன் நம்பர் இருக்கா?"

"இருக்கு. அவன் நம்ம ஆஃபீஸ்ல தானே வேலை செய்கிறான்..."

"ஃபோன் பண்ணி, அவனை உடனே வர சொல்லு"

"சரி" என்று அழைப்பை துண்டித்த மித்திரன், ராக்கேஷுக்கு ஃபோன் செய்ய நினைக்க, அவன் மகிழனின் வேறொரு நண்பனான பாபுவுடன் உள்ளே நுழைவதை கண்டான். அவர்களை நோக்கி விரைந்த மித்திரன், ராகேஷின் கரத்தை பற்றி கொண்டு, அவனை மலரவனின் அறையை நோக்கி இழுத்துக்கொண்டு நடந்தான். பாபுவும் அவர்களை பின்தொடர்ந்தான்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now