28 பூங்குழலியின் பதிலடி

1.1K 77 8
                                    

28 பூங்குழலியின் பதிலடி

புயலைப் போல சமையலறைக்குள் நுழைந்த பூங்குழலி, அங்கு கீர்த்தி காப்பியை குவளையில் ஊற்றிக் கொண்டிருப்பதை கண்டாள். அவளை தன்னை நோக்கி இழுத்த பூங்குழலி, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். அந்த அறை, அவளது உடலை நடுக்கம் காண செய்ததால், தன் கன்னத்தை பற்றி கொண்டு அதிர்ச்சியுடன் நின்றாள் கீர்த்தி.

"என்னைப் பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க?ஹாங்? நான் எப்படி ஆம்பளைங்களை வளச்சு பிடிக்கிறேன்னு கேட்டல? அதைப்பத்தி நீயேன் என்கிட்ட கேக்குற? நீ தான் அதுல கை தேர்ந்தவளாச்சே. உன்னோட லட்சணம் என்னன்னு ஏற்கனவே என் புருஷன் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாரு. என் புருஷனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நீ எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா? உன்னோட இம்சை தாங்க முடியாம தானே உன்னோட நம்பரையே அவர் பிளாக் பண்ணி வச்சிருந்தாரு..! அவரை மடக்கிப் பிடிக்க நீ என்ன எல்லாம் செஞ்சேன்னு எல்லாமே எனக்கு தெரியும். உன்னோட பாட்சா அவர்கிட்ட பலிக்கலன்னு தெரிஞ்சதுக்கு பிறகு, அவரோட தம்பி மேல பொய்யான பழியை சுமத்தி அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டது எனக்கு தெரியாதா? இதுக்கப்புறம் ஏதாவது என்னை பத்தி பேசுன, உன்னோட நாக்கை இழுத்து வச்சு அறுத்துருவேன் ஞாபகத்துல வச்சுக்கோ"

அவளை நோக்கி ஓரடி முன்னேறிய பூங்குழலி,

"என்னோட புருஷன் இங்கிருந்து அமைதியா போனதுக்கு காரணம், நீ சொன்னதை ஏத்துக்கிட்டதால இல்ல. நீ பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு நான் அமைதியாக இருக்கக் கூடாதுன்னு அவர் நினைக்கிறாரு. என்னை தரகுறைவா பேசுறவளோட பல்லை நான் உடைக்கணும்னு நினைக்கிறாரு. அவர் ஆசைப்பட்டதை தான் இப்ப நான் நிறைவேத்தி இருக்கேன். இன்னொரு தடவை என்னோட வழியில் குறுக்கிட்டா, உன் பல்லை உடைக்க நான் தயங்க மாட்டேன்" தன் விரல்களை கீர்த்தியின் முகத்தருகே சொடுக்கினாள், எச்சரிக்கும் தொணியில்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now