7 முந்திக்கொண்ட மலரவன்

1.2K 77 14
                                    

7 முந்திக்கொண்ட மலரவன்

தில்லைராஜனின் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் அப்பாவின் காரிலேயே மலரவன் படுத்துக்கொள்ள, மணிமாறன் வரவேற்பறையில் இருந்த சோபாவிலும், மின்னல்கொடி  சிவகாமியுடனும் படுத்துக்கொண்டார்கள். மிகவும் கலைப்பாய் இருந்ததால், படுத்தவுடன் உறங்கிப் போனார் மின்னல்கொடி. ஆனால் சிவகாமியோ நள்ளிரவு வரை தூக்கம் வராமல் விழித்திருந்தார். பூங்குழலி சுத்தமாய் தூங்கவே இல்லை. அவள் தான் மருத்துவமனையிலேயே தேவையான அளவு உறங்கி விட்டாளே. தன் அறையில் இருந்த ஜன்னல் அருகே வந்த அவள், வெளிப்பக்கம் பார்த்தபடி நின்றிருந்தாள்.

அப்போது, மலரவன் காரின் பின் இருக்கையில் இருந்து இறங்கி, முன் இருக்கையின் கதவை திறந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து பார்ப்பதை கண்டாள். அந்த பாட்டில் காலியாய் இருந்தது. சமையலறைக்குச் சென்ற பூங்குழலி, குளிர்சாதன பெட்டியில் இருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். தண்ணீர் அருந்தாமலேயே மலரவன் உறங்க முற்படுவதை கண்ட அவள், காரின் கண்ணாடி ஜன்னலை தட்டினாள். அவள் நிந்திருப்பதை பார்த்த மலரவன், அவசரமாய் காரை விட்டு கீழே இறங்கி வந்தான்.

"பூங்குழலி, நீ இங்க என்ன பண்ற?"

தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டினாள்.

"தண்ணி வேணும்னா என்னை கேட்டிருக்கலாமே..."

"எல்லாரும் தூங்கிக்கிட்டு இருக்கீங்க. உங்க தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்"

"இதுல என்ன டிஸ்டர்பன்ஸ் இருக்கு? உங்களுக்கு எது வேணும்னாலும் என்னை கேட்கலாம்"

"சரி, எனக்கு எது வேணும்னாலும் கேக்குறேன்"

சரி என்று தலையசைத்துவிட்டு அவள் வீட்டினுள் செல்ல, காரில் அமர்ந்தபடி புன்னகையுடன் தண்ணீர் அருந்தினான் மலரவன்.

மறுநாள்

தில்லைராஜனின் வீட்டிற்கு வந்த மகிழன், அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமைதியாய் அமர்ந்து கொண்டான். அதைக் கண்ட மலரவன், அவனிடம் வந்தான்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now