"ரொம்ப கவனமா கேட்டுக்கோங்க சரசு, சீரியசான மேட்டர்....." சக்தி பில்டப்பை ஏற்ற, 'நீ எத மா சாதாரணமா சொல்லிருக்க, எல்லாத்தையும் ரீசியசாதானே பேசிவ' யோசித்தபடியே நின்றாள்.
"அட என்னம்மா ஆரம்பிக்கிறதுக்குள்ளயேஆடிப்போயிட்ட, விசயத்தை முழுசா கேட்ட ஆடிப்போயிடுவீங்க ஆடி"
"அம்மா சக்தி, வயசான உடம்புமா, கொஞ்சம் பில்டப்பை ஏத்தாம மேட்டருக்கு வா"
"ஆதுவா அக்கா, அத நான் எப்படி சொல்லுரது.... "
"சரிமா வேற யாருகிட்டயாவது சோல்லி அனுப்பு நான் கேட்டுக்கரேன்" சட்டென பல்பு கொடுத்தாள் சரசு.
"கோவப்படாத அக்கா, முதல்ல கேலு"
"சரி நீ முதல்ல சொல்லு" சரவெடியாக சரசு பாய, சற்று தத்தளித்தால் சக்தி.
"அது வந்து அக்கா... பார்வதிக்கு வித்தியாசமான ஒரு வியாதி இருக்கு, இது வர யாருக்கும் இந்த விசயம் தெரியாது, அவளுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரிஞ்சது போல, இது வரை மூன்னு பெயருக்கு தான் விசயம் தெரியும்."
"என்ன எதாச்சும் புது கதை கட்டப்போறியா? நீ இவ்வளவு நாள் ஏதாச்சும் ஒன்னு சொல்லுவ நான் கேட்டும் கேக்காத மாதிரி விட்டு விடுவேன், இப்ப வீடு முழுக்க சொந்தங்கள் நிறைஞ்சிருக்கு, இப்பவும் எதாச்சும் கலகம் பண்ணணும் என்ற நினைப்போட பேசாத" என சரசு மிரட்ட, "ஐயோ அக்கா, நான் சொல்லப்போரது சத்தியம், ஏன்னா பார்வதியே தான் இத என் கிட்ட சொன்னா" சக்தி மூட்டிய தீ மெதுவாக பரவியது.
"பார்வதியா? , சரி சொல்லு, என்ன விசயம்"
"அது வந்துக்கா, பார்வதிக்கு எதோ, ஆன்ரோபோபியா வாம்"
"அப்படினா?" பதற்றத்துடன் சரசு,
"அப்படினா, ஆண்கள் மேல வர பயமாம் அக்கா, கணவன கூட நெருங்க விட மாட்டாங்களாம் இந்த வியாதி உள்ளவங்க"
மடமடவென இடியே தன் தலை மீது இறங்கியதைப்போல் உணர்ந்தாள் சரசு. பேச வார்த்தையின்றி தத்தளித்தாள். 'என்ன செய்வது, இது சிவாவிற்கு தெரியுமா?, நிச்சயம் தெரிந்திருக்கும், பின் ஏன் இந்த அமைதி?' யோசித்து யோசித்து மயங்கி கீழே விழுந்தாள் சரசு.
YOU ARE READING
💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)
RomanceNow available on Amazon Kindle கல்யாணம் என்றாலே கொண்டாட்டம் மட்டும் தானா?? வீட்டைக்கட்டி பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு.... என பெரியவர்கள் சும்மாவா சொல்லிட்டு போயிருக்காங்க??, இங்க நம்ம வீட்டு கல்யாணம் எப்படி நடக்குது, அதில வர பிரச்சனைகள நம்ம ஹூரோ, ஹூரோ...