ஏஞ்சினோ நாட்டுப்படைத் தளபதியான ஜோவான் பிறழ்பெடை ராஜ்ஜியத்தின் அரண்மனைக்கு வருகைபுரிவதாகவும், ஆகையால் அவருக்கு தேவையான சகல வசதிகளும் அமைத்துதருமாறும், தன் தந்தை தன்னிடம் ஒப்படைத்த பணியினை தேவர்ஷனா அமைச்சர் சத்குரு அவர்களிடம் கூறி ஆணை பிரப்பிக்க... தாங்கள் கூறியது படியே இளவரசர் ஜோவான் அவர்களுக்கு தேவையான சகல சௌகரியத்தையும் சிறப்பாக செய்து விடலாம் இளவரசியே... என்று நம்பிக்கை தெரிவித்து தேவர்ஷனாவிடமிருந்து விடைபெற்றார் அமைச்சர் சத்குரு...
அதற்கான பணிகள் யாவும் இங்கு விமர்சியாக நடைபெற்றுகொண்டிருக்க
.
.
.
.
.
.இங்கு
தனக்கு முன் ஒரு ஆளடி அங்குலம் இருக்கும் மந்திரக்கண்ணாடியின் வழியாக அரண்மனையில் நடக்கும் அணைத்து விடயங்களையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் அகோரன் என்கின்ற அரக்கன்...தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியை மட்டுமே கண்டதை எண்ணி அகோரன் கடும் கோபத்தில் தன் கண்ணில் அகப்பட்டவை அணைத்தும் வீசி எரிந்தான் இருள் மங்கிய நிலையில் ஆங்காங்கே சொருகிருக்கும் நெருப்பின் ஒளியின் உதவியால் மட்டுமே அங்கு வெளிச்சம் நிறைந்திருக்க, அந்த மாளிகையே இடிந்தும் விழும் அளவிற்கு ஆக்ரோஷமாக கத்தினான், அவ்விரைச்சல் தாங்காமல் அங்கிருந்த வௌவால்கள் அணைத்தும் அவ்விடத்தை விட்டு அகன்று வேரொரு இடத்திற்கு தஞ்சம் கொண்டன..
அகோரன்..... இவன் பார்ப்பதற்கு மனித இனமா என சந்தேகிக்கும் அளவில் இருக்கும், தடிமனான உடலமைப்பும், கூரிய நகங்களை கொண்டும், நெற்றியில் பிறை நிலா வடிவத்தில் மையினால் கரு நிறத்தில் பெரிய அளவில் அச்சிடபட்டும், அவனது தலை முடி சற்று அதிகமாகவும் அவன் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஏற்றார்போல் அவன் கூந்தலும் நடை பழகும், எந்நேரமும் பழிவாங்க துடிக்கும் அவனது குணம் கண்களின் வழியே இரத்தமென சிவந்து அது ருத்ரமாகவே காட்சியளிக்க....
YOU ARE READING
மாய உலகம்
Fantasyமந்திர சக்திகள் கொண்ட தேவதைகளும், மாய உயிரினங்களும் நிறைந்த அற்புத உலகத்தில், தேவதைகள் வாழும் அழகிய ராஜ்ஜியமான பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றி ராஜ்ஜிய மக்களின் மனம் கவர்ந்த இளவரசியை மணக்க எண்ணுகிறான் தீய மந்திரவாதி அகோரன். ஆனால், அகோரனால் பிறழ்பெடை...