அத்யாயம் - 6

1.1K 52 20
                                    


"என்னடா சொல்றான் இவன்?" புலம்பி முடித்து நிம்மதியாக உறங்க, சென்றிட  தமிழ் ஒன்றும் புரியாமல் அகன்ற விழிகளுடன் கௌதமை பார்த்து கொண்டு இருந்தான்.

"அவன் போதைல இருக்கானா இல்ல நான் போதைல இருக்கேனான்னு தெரியலடா, ஆனா பெருசா பிரச்னை நடந்துருக்கு" கெளதம் பயத்துடன் தூங்கி கொண்டிருக்கும் ஆதியை பார்த்து கூறினான், 

"முழுசா சொல்லு டா அவனை மாதிரியே அரையும் குறையுமா போதைல பேசாத" கோவமாக தமிழ் கூற, தமிழிடம் கெளதம் நடந்த அனைத்தையும் கூறினான், 

"இவன நெனச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு மச்சா... ஏதாச்சும் லூசு மாதிரி பண்ணிட போறான் கோவத்துல"

"டேய் இன்னோன்னு மறந்துட்டியா நாங்க ரெண்டு பேரும் அவன்ட்ட தான்டா ஒர்க் பண்றோம். இவன் எதாவது பண்ணி எல்லாரோட வேலையும் போய்ட போகுதுடா. அப்றம் உங்க வீட்டுல எனக்கு பொண்ணு தர மாட்டாங்க" 

ஆம் ஆதி, கெளதம் இருவரும் பனி புரியும் இடம் உதய் மாதவனின் அலுவலகத்தில் தான், கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூல் தேர்வாகி வந்தவர்கள் தான். எனோ அந்த கம்பெனி நடந்தும் நேர்காணலிற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று ஆதி அன்று கூறியபொழுது அவனை வித்யாசமாக பார்த்தவர்கள், நாள் போக்கில் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். சிறிது காலம் அவர்களுடன் பணிபுரிந்த தமிழ் மேற்படிப்பு படித்து கல்லூரியில் இப்பொழுது ஆசிரியராக பணிப்புரிகிறான்.

"ஐயோ இப்ப சார்கு யாரு பொண்ணு தரேன்னு சொன்னது? இன்னும் பேசி முடிக்கல" கௌதமின் காலை வாரினான் தமிழ்.

"டேய் நாமெல்லாம் அப்டியா பழகிருக்கோம்"

"இல்லடா நீ யாருன்னே எனக்கு தெரியல. மூடிட்டு தூங்கு இவன வேற காலைல சமாளிக்கணும்"

போர்வையை தூக்கி தலையை மட்டும் தமிழை நோக்கி பார்த்தவன் ஒரு கெஞ்சலாடு கண்களை சுருக்கிய கெளதம், "உன் தங்கச்சி நான் இல்லாம வாழ மாட்டா டா பாத்துகோ"

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now