அத்தியாயம் - 28

940 32 43
                                    

சதுரங்க ஆட்டத்தின் முன்னாள் அமர்ந்திருந்த உதயின் எதற்கும் அலட்டாத தோற்றத்தைப் பார்த்துக்கொண்டே உள்ளே வந்த ஈஸ்வரன் முகத்தில் சிரிப்பு இருந்தாலும், வளமை மாறாமல் மனதில் குரூர எண்ணங்கள் பல தோன்றி மறைந்தன என்பது அலைபாயும் அவர் கண்களிலே தெரிந்தது. 

"என்ன உதய் ஏதோ பேசணும்னு சொன்னியாம்ல. ஆபீஸ்ல பேசிருக்கலாமே எதுக்கு இவ்ளோ தூரம் நீ அலையனும்?" அக்கறையுள்ள மாமனாய் மருமகனிடம் வினவியபடியே அவனுக்கு எதிரில் வந்து தானும் அமர்ந்தார். 

"இங்க தான் கொஞ்சம் வேலை இருக்கு... ஆபீஸ்ல பேசுற விசயமும் அது இல்லையே" - உதய் 

"அப்டி என்ன உதய் நீ பேசணும்...?" 

"இருபத்தி அஞ்சு வருசமா அம்மா அப்பா காசுல கொஞ்சம் கூட கூசாம சாப்டுட்டு இருந்தவனை தன்னோட பொண்டாட்டிக்காக ஒருத்தர் மதிச்சு வேலை குடுத்தா... அந்த பிச்சைக்கார பயன், சோறு போட்ட வீட்டுக்கே துரோகம் பன்றான்... இவன் எல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்புடுறானுகளா இல்ல வேற எதையாவது கரைச்சு குடிக்கிறானுகலானு தெரியல" 

நக்கல் வலிந்து ஓட ஓட பேசியவனைத் தீயாய் முறைத்தவர், "உதய்..." பற்களைக் கடித்து அடக்க முயன்றார். 

"இருங்க இருங்க இன்னும் முடிக்கல நான்" மேலும் தொடர்ந்தான், "சரி ஆயிரம் லட்சம்-னு அடிச்சதோட நிறுத்துச்சா அந்த அன்னக்காவடி? இல்ல... அந்த எச்சைக்கு போரா போரா மாதிரி குளு குளு-னு தீவு வேணுமாம்" 

மருமகனின் வார்த்தை நீண்டு கொண்டே செல்ல கழுத்தோடு ஒட்டியிருந்த சட்டை பட்டன்கள் இரண்டை அவிழ்த்தார்... மூச்சு முட்டும் எண்ணம் அவருக்கு. 

"அது தான் உங்களுக்கு ஏதாவது தீவு விலைக்கு வருமான்னு கேக்க வந்தேன்" 

"என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா உதய்?" கடுகும் எண்ணெய்யுமாய் வெடித்தது அவர் முகம். 

"ஏன் தெரியாம? சாப்பிட்ட சாப்பாடை எப்படி செரிக்கிறதுன்னு தெரியாம அடுத்தவன் குடிய கெடுக்குறதுக்கு வித விதமா யோசிக்கிற ஒரு திருட்டு காபோதி முன்னாடி கால் மேல கால் போட்டு தெளிவா... நிதானமா... தைரியமா பேசிட்டு இருக்கேன்" 

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now