அத்தியாயம் - 17

1K 42 46
                                    

Comment section thee parakanum... comeon makkale.... your comments always encourages me...

Tag your wattpad friends to share the story if u like it. Please

"டேய் என்னடா நெனச்சிட்டு இருக்கான் உன் சார் மொத அவன்ட்ட போன குடு" கடும் கோவத்தில் ஆதவன் ஜெயனை திட்ட ஒரு வாறு அவனுக்கு ஆதியை பற்றி தெரிந்திருக்கும் என்று யூகித்தான் ஜெயன்.

"சார் மீட்டிங்ல இருக்காரு சார் எப்ப மீட்டிங்ன்னு தெரியாது"

"நைட் 2 மணிக்கு எந்த கிறுக்கண்டா மீட்டிங் வச்சிட்டு இருக்கான்? உள்ள போய் பாரு அவன் தூங்கிருப்பான்"

"சார்... இல்ல சார்... உள்ளுக்குள்ள வர கூடாதுன்னு சார் சொல்லிருக்காரு"

"டேய் அவன் எந்த கொம்ப வச்சு முட்டுறான்னு நானும் பாக்குறேன். ஆமா ஆதி பின்னாடி உன் ஆளுங்கள ஏவி விட்ருப்பானே இன்னேரம்... எங்க இருக்கான் ஆதி?" அவன் குரலில் இருந்த இறுக்கமும் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த ஹார்ன் சத்தமும் அவனது கோவத்தை கூற உண்மையை கூற தயங்கினான் ஜெயன்.

ஜெயனின் அமைதியே அவனுக்கு உண்மை தெரியும் என்று கூற நிதானமான குரலில், "அப்ப அவன் எங்க இருக்கான்னு உனக்கு தெரியும்... சரி எங்க இருக்கான் ஆதி?"

"உதய் சார் கிட்ட பேசிட்டு சொல்றேன் சார்" என்றவன் ஆதவனிடம் பேசியபடியே உதய்யின் அறையை நோக்கி சென்றான்.

கதவிற்கு அருகில் வந்ததும் அதை தட்ட பயத்துடன் வெளியே நின்றிருக்க காதில் கத்திக்கொண்டிருந்தான் ஆதவன், "டேய் என்ன டா பண்ணி வச்சிருக்கீங்க என் ப்ரண்ட? மவனே நேர்ல வந்தேன் கொன்னு பொதச்சிடுவேன் உன்னயும் அவனையும். அவனுக்கு மட்டும் எதாவது ஒன்னு ஆகிருந்துச்சு இந்த ஆதவன் யாருன்னு உன் ஆளுங்களுக்கு தெரியும்" ஆதவனின் பொறுமையின்மையை பார்க்க எதையும் கேட்கும் நிலையில் அவன் இல்லை என்று உணர்ந்த ஜெயன் கைகள் தானாய் உதய்யின் கதவினை தட்டினான்.

"சார் நாங்க ஒன்னும் பண்ணல சார்... சுச்சுவேஷன் அப்டி உதய் சார் மாமா..." மாதவனுக்கு புரியவைக்கும் எண்ணத்தோடு கூற விளைய,

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now