மறுமுறை ஏற்பாயா 6💘

776 36 2
                                    

கார் விமல் கிராமத்தை  நெருங்கி கொண்டு இருந்தது....

காரில் பெருத்த அமைதி மட்டுமே...

இப்போ எதுக்கு ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டு இருக்குறாரு??ஒரு வேளை அவுங்க அப்பாவும் பாட்டியும் என்னை பேசுனது  அவருக்கு தெரிஞ்சிருக்குமோ??அய்யயோ...😨என மனதில் நினைத்துக் கொண்டு அவள் அமர்ந்து  இருந்தாள்.....

இப்போ எதுக்கு ஊருக்கு போறோம்னு ஒரு வார்த்தை கேட்குறாலானு பாரு திமுறு புடிச்சவ..😠 என அவன் மனதிலும் நினைத்து கொண்டு சென்றனர்.....

ஊருக்கு வந்ததும் விமல் அம்மா வாசலில் வந்து வரவேற்றார்...,

விமலு...வாடா....எப்படி இருக்க??அடடே வாமா ரோஜா....எப்படிடா இருக்க???

ஐயோ மா...கொஞ்சம் கேப் விடு...நாங்க ரெண்டு பேரும் நல்லா தான் இருக்கோம்....அப்பா,பாட்டியெல்லாம் எங்க???

உள்ள தான் இருக்காங்க..வா....

முனியப்பா தம்பி கார்ல இருக்குற லக்கேஜ் எடுத்து ரூம்ல வை...

உள்ளே நுழைந்ததும் வா விமல் என தந்தை அழைத்தார்....ரோஜாவை ஒரு பார்வையோடு சரி.....

அவளும் அவரிடம் பெரிய வரவேற்பை எதிர்பார்க்க வில்லை... இது இன்று மட்டும் இல்லை.... திருமண மான அன்றிலிருந்து இப்படித்தான்....

ரோஜாவும் விமலும் கல்லூரியில் இருந்தே காதலித்தனர்... இருவரும் வேறு வேறு ஜாதி....விமல் அப்பா காதலை ஏற்க மறுத்து விட்டார்.... இருவரும் எவ்வளவோ போராடி பார்த்தனர் ....
விமலுக்கு அவர் தங்கை பொண்ணை பேசி முடித்தார்....எனவே இருவரும் ரெஜிஸ்டர் ஆஃபிசில் திருமணம் செய்து கொண்டனர்.....
இருவரையும் வீட்டிற்குள் ஏற்கவே இல்லை வெகு நாட்களாக.... பின் விமலின் அம்மாவிற்கு மகனை குறித்த ஏக்கம் வளர்ந்து மிகவும் முடியாமல் போய் விட்டது.....
மனைவி என்றால் விமல் தந்தைக்கு உயிர் எனவே மனைவிக்காக மகனை ஏற்று கொண்டார்.... ஆனால் இன்று வரை ரோஜாவிடம் பேசுவதில்லை...
விமல் எவ்வளவோ முயன்றும் பேச வைக்க முடிய வில்லை.....

மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்புWhere stories live. Discover now