ஜனனி கண்ணீருடன் நின்று கொண்டு இருந்தாள்...அதுவே வீராவுக்கு கேள்வியாக இருந்தது...இவள் இவ்வளவு அமைதி எல்லாம் கிடையாதே???
வெளிய போங்க எல்லாரும்....😠கத்தினாள் ராஜி....உள்ளே சென்று அவள் அறை கதவை அடைத்து கொண்டாள்...
வீரா ஒன்றும் பேசவில்லை...அவனுக்கு தெரியும் ராஜி வேதனை....
மாமா...என அவன் ஆரம்பிக்க...
புரியும் வீரா...தாய் பாசம் கிடைக்காமல் வளர்ந்த பெண்....கிடைக்கும் நேரத்தில் அது நிலைக்கவில்லை....அவளின் ஆதங்கம் நியாயமானதே....என சொல்லி சிவ மித்ரனை பார்த்தார்...
அவன் கண்கள் கலங்கி...உடைந்து போய் நின்று இருந்தான்....யார் பக்கம் செல்ல???தமக்கையா??காதலியா???
ஜனனி ராஜி அறை அருகே சென்றாள்...
ராஜி...என்னை உன்னால் மன்னிக்கவே முடியாது என தெரியும்....அன்று நான் பார்த்து இருந்தால் இன்று உன் அம்மா உயிரோடு இருப்பார்கள்....அதை என்ன ஆனாலும் மன்னிக்க முடியாது..😖😖😖..ஆனால்...மித்ரன் காதல் உண்மை... நீ இங்கு வந்த பிறகு தான் அவனுக்கு நிச்சயம் நீ ராகவ் தங்கை என தெரிந்து இருக்கும்....😖தெரிந்த நாளில் இருந்து அவன் தூங்கி கூட இருக்க மாட்டான்....அவனுக்கு நீ என்றால் கொள்ளை இஷ்டம்...😖..வேண்டுமானால் அவனை இங்கேயே வைத்து கொள்ளுங்கள்...ஆனால் என்னை தண்டிப்பதாக அவனை தண்டிகாதே😖🙏..உன்னை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்....
அக்கா...எனக்கா பண்ற??? மித்ரன் அவளை தடுக்க...
10வயசுலயே அவ சாகனும்னு நெனச்சேன் மித்ரா...இன்னிக்கு வரை அவ இழந்த அனைத்துக்கும் காரணம் நான் தான்...இன்று அவள் காதல் கிடைக்காமல் போவதற்கும் நான் தான் காரணம்....😖😖..
உள்ளே ராஜி மனம் உலை கலனாக கொதித்தது.... அவள் அம்மா படம் அருகே சென்றாள்...
உங்க மடியில படுக்கணும், உங்க கூட பேசணும்னு நிறைய ஆசை இருக்கும் அம்மா..அதெல்லாம் எனக்கு வெறும் கனவாக மட்டுமே இருந்தது....அதை இழந்தேன்...வீரா அண்ணாவும் நானும் கையில் பச்சை குழந்தையுடன் எத்தனை நாட்கள் சாப்பிடாமல் படுத்து இருக்கிறோம்...இதெல்லாம் அந்த திமிர் பிடித்தவள் ஜனனியால்....சிவா...என் சிவா..அவனும் கூட என்னை ஏமாற்றி உள்ளான்😭😭அதை என்னால் தாங்கவே முடியல மா.....அவரின் படத்தை கட்டி கொண்டு பேசினாள்....
YOU ARE READING
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு
Short Storyதன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???