மறுமுறை ஏற்பாயா 21💘

815 32 4
                                    

அம்மா..கொஞ்சம் வெளிய போறியா??

ஜனா கஸ்தூரியை பார்த்து கூற...அவர் முகம் மாறியது....
பெத்த அம்மாவையே வெளிய போக சொல்றியாடி???

கையெடுத்து கும்பிட்டு...ஆமா..வெளிய போ...என் பொண்ணு கூடவும் என் புருஷன் கூடவும் நான் பேசணும்...என வீராவை பார்த்து கொண்டே கூறினாள்...

வீரா அவர் புறம் கூட திரும்பவில்லை....

முறைத்து கொண்டே அவர் எழும்ப...உள்ளே நுழைந்தாள் ராஜி அவள் பின்னே சிவா..

வாப்பா நான் பெத்த மகராசா??நீயும் உங்க அக்கா மாதிரி தானா??இல்ல நீயாவது நான் சொல்றதை கேப்பியா???

அவன் பதில் சொல்லாமல் ராஜியின் கைகளோடு தன் கரத்தை கோர்த்தான்...

அதிர்ந்தே விட்டார் கஸ்தூரி...ஏய்.😠😠என்னடா பண்ற??அவ கையை விடு டா...

அவன் மேலும் இறுக்கி பிடித்தான் தவிர விட வில்லை...ராஜி கூட  அவனைத்தான் பார்த்து கொண்டு இருந்தாள்....

என்ன பாக்குறீங்க??இவளை தான் காதலிக்கிறேன்... கட்டுனா இவளை தான் கட்டுவேன்...அதோட...நானும் வீட்டோட மாப்பிளையா போறேன்.... மாமா உங்களுக்கு ஓகேவா??என வீராவை பார்த்து கேட்க....

அவன் புன்னகைத்தான்...என் தங்கச்சிக்கு ஓகே வா??என ராஜியை பார்க்க...

அவள் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்... நீ சொன்னது உண்மையா?

என்னது??

வீட்டோட மாப்பிள்ளையா இருப்பியா??எங்க வீடு உங்க அம்மா சொன்ன மாதிரி தீப்பெட்டி தான்..government quarters தான்...உங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகாதே என ஜனாவையும், சிவாவையும் பார்த்து கேட்க...

கண்டிப்பா...ஏன் அதுனால என்ன??உன்கூட இருக்கணும்😍..என் ராஜி என் பக்கத்துல இருந்தா போதும்...வீட்டோட மாப்பிளைனு தயக்கம் கூட இல்ல😍😍என கண்களில் காதலுடன் கூறினான்...

அவனின் வார்த்தையில் அவளுக்கு பெருமிதமாக இருந்தது....திரும்பி அண்ணனை பார்க்க...அவன் ஜனாவை கண்டான்....அவனின் பார்வையில் அவளுக்கு குற்றவுணர்வு அதிகம் ஆகியது....

மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்புWhere stories live. Discover now