மறுமுறை ஏற்பாயா 15💘

724 31 0
                                    

இது யாரு குழந்தை ஜனா என கஸ்தூரி மறுபடியும் கேட்க....

பிரபா வந்து பாப்பாவை தூக்கி கொண்டார்...இது யாரா இருந்தா உனக்கென்ன?? உன் வேலைய பாரு என சொல்லி விட்டு குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே சென்றார்...

ஜனனி பே வென விழித்து கொண்டு இருக்க...சிவா உள்ளே வந்தான்..வந்தவர்களை சட்டையும் செய்யாது ஜனனி கையை பிடித்து இழுத்து கொண்டு உள்ளே சென்றான்...

டேய்..நில்லுடா.... உன் அக்காவை தான் இவுங்க பார்க்க வந்துறுக்காங்க..வந்தவங்களை வாங்கனு கூட கேக்க மாட்டியா??இப்படித்தான் உன்னை வளர்த்தேனா???😠😠

ஆமா ஆமா..ரொம்ப நல்லா வளர்த்த.... நீ வளர்த்த லட்சணம் தான் ஒன்னு புருஷன் கூட வாழாம இருக்கு, என் வாழ்க்கை உன் வளர்ப்பால தான் அந்தரத்துல தொங்கிட்டு இருக்கு😠..என்னை பேச வைக்காத....என அவளை இழுத்து கொண்டு உள்ளே சென்றான்...

உள்ளே சென்று அவளை முறைத்தவன்...உனக்கு அறிவு இருக்கா இல்லையா???எதுக்கு இப்படி இருக்க????

பவி.....

கையை இருக மூடி திறந்தான்...உனக்கு புரியுதா இல்லையா??உன் வாழ்கையவே உன்ன பெத்தவங்க பேரம் பேசிட்டு இருக்காங்க...உனக்கு புரியலையா???மொத்தமா பைத்தியம் ஆகிட்டயா??உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி புருஷன் புள்ள இருக்கு...😠

எனக்கு எல்லாம் புரியுது மித்து...இதுக்கு அப்புறம் என் வாழ்க்கை எனக்கு கிடைக்கும்னு நம்பிக்கை இல்ல😖..பவிய மீட்டு குடுத்தா போதும்..அவுங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கட்டும்...இதை சொல்லும் போதே தொண்டை அடைத்தது அவளுக்கு..

உன் பொண்ணு வேணாமா அக்கா???

அவ தான் என் உயிரே.....ஆனா ராகவன் என்னை நெருங்க விடணுமே...

முயற்சியே பண்ணாம முடியாதுனு சொல்லாத...இது என் அக்கா இல்ல..அவளுக்கு ஒன்னு வேணும்னா அடம் பிடிப்பா...

அவளிடம் பதில் இல்லை...

இங்க பாரு... மாமா உன்னை அப்படி ஒன்னும் வெறுக்கல...அவர் உன்னை தான் பாத்துட்டு இருந்தாரு... நீ மாறிட்டனு அவருக்கு தெரிஞ்சா மட்டும் போதும்...அவர் கண்டிப்பா ஏத்துப்பாரு...

மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்புWhere stories live. Discover now