மெல்ல பவி அருகே சென்றவன்...அவள் கரங்களை பிடித்தாள்...
அந்த ஸ்பரிசம் அவளுக்கு வருடங்கள் ஆனாலும் மறக்காதே....கண்மணிகள் உருல ஆரம்பித்தது....சுபாஷ் ஆச்சர்யமாக பார்த்து கொண்டு இருந்தான்...
டாக்டர்கள் உற்சாக படுத்த...
மெல்ல கண்களை திறந்தாள் பவித்ரா...வீரா முகத்தில் அத்தனை சந்தோஷம்....எந்த தோழியை இனி காணவே முடியாது என நினைத்தானோ..அவள் இன்று உயிருடன் கண் முன்....வெகு வருடங்களுக்கு பின்...கண்களை திறப்பதால் அதிக ஒளியை கண்கள் தாங்க முடியவில்லை....மெல்ல மெல்ல தான் கண்களை திறந்தாள்...கண் முன் வீரா...
வீ.....வீரா....வார்த்தைகள் மெல்ல வெளிவந்தன...
பவி....பவி... என அழைத்தான்...வார்த்தை வரா நிலை என்பது அது தானோ..??
மெல்ல எழுந்து அமர முயல...அவளால் முடியவில்லை...
வேணாம் வேணாம்...எல்லாம் ஒரே நேரத்துல பண்ண கூடாது மா...டாக்டர் சொல்ல...
படு பவி... strain பண்ணாத....நாங்க வெளிய இருக்கோம்...என வீரா செல்ல..
அவன் கைகளை பிடித்தாள்...வீரா..ஜனா..??
அவளருகே அமர்ந்தவன்...ஜனாவை ஜெரால்ட் சுட்டுட்டான்...
ஜெரால்ட் பெயரை கேட்டதும் அவள் உடல் ஒரு முறை நடுங்கியது...அவன்..அவன் தான் என்னை தள்ளி விட்டான் வீரா...அவன் இன்னும் வெளிய இருக்கானா???அவள் குரல் நடுங்கியது...
இல்ல போலீஸ் பிடிச்சாச்சு....
அப்பா..என்னும் மழலை குரல் கேட்க..இருவரும் திரும்பினர்...
கதவின் அருகே நின்று கொண்டு இருந்தாள் தேஜா..
அம்முகுட்டி உள்ளே வாங்க...என வீரா அழைக்க..ஓடி வந்து தந்தை மடியில் அமர்ந்தாள்..
பவி..இது தேஜஸ்..என் பொண்ணு...
பவி புன்னகையுடன் அவள் தலையை தடவினாள்....
நீங்க பவி ஆன்டி தான??அப்பா ஃபோன்ல பார்த்திருக்கேன்...
அப்படிங்களா செல்லம்....அப்படியே உங்க அம்மாவை பார்க்குற மாதிரி இருக்கு..அவளை கொஞ்சினாள்...
YOU ARE READING
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு
Short Storyதன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???