அலை - 2

583 13 1
                                    

"அய்யய்யோ...! யோவ் என்னயா பண்ணி வச்சிருக்க, என் செல்லத்தை?" தலைக்கு பின்னாலிருந்து கேட்ட அந்த அதீத கத்தலில், கையில் பட்ட அடியைக் கூட மறந்து அவன் திரும்பி பார்க்க, வந்த குரலுக்கும் அந்த முகத்திற்கும் சிறிதும் சம்மந்தமில்லை.

ஒரு வாரமாக காய்ச்சலில் வீழ்ந்திருந்தவள் இன்னும் முழுதாக உடல் தேறாமல் இருந்தாலும், மனம் அமைதியைத் தேட உடனே கிளம்பி வந்துவிட்டாள் ஆரோஹி. வந்த இடத்தில் அஸ்வின் சம்பவம் நிகழ்த்தியிருந்தான்.

"எக்ஸ்க்யூஸ் மீ?" என்றான் அதிர்ந்து.

தன்னை திரும்பி பார்த்த அந்த ஆணின் முகத்தைப் பார்த்ததும், அடுத்து திட்ட வந்த வார்த்தை மறந்து போனது. இவன்... இவனே தான்! அஸ்வின் நாராயண். மட்டைப்பந்து வீரர்.

இந்தியாவின் அதிக புகழ்பெற்ற மனிதர்களுள் ஒருவன். பல ரசிகர், ரசிகைகள் என வாழ்பவன். அவனை பற்றி, அவன் புகழ் பற்றி அறிந்தவள், அவன் ஆடும் ஆட்டத்தைப் பற்றி தெரிந்திருக்கவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் மனம் நினைத்து கூத்தாடியது. தான் முதன்முதலில் இத்தனை நெருக்கத்தில் சந்திக்கும் ஒரு பிரபலம். அவன் தானா என ஆராய அவளுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன.

தான் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் தன்னையே கண் சிமிட்டாது பார்த்திருந்தவளை, தான் சந்திக்கும் ரசிகர்களில் ஒருவளாய் நினைத்தவன் இதழ்களின் ஓரம், சிறு புன்னகை உருவாக அதை பெண் கண்டுகொண்டாள்.

"என்ன எக்ஸ்க்யூஸ் மீ? ஆ? என்ன தைரியமிருந்தா என் திவியை தள்ளி விட்டிருப்பீங்க?"

நீ பார்க்கும் சராசரி பெண் அல்ல நான் என்பதாய், மூக்கு புடைக்க பேசியவளைப் புரியாமல் பார்த்தவன், எழுந்து நின்று மீண்டும் தங்கள் இருவரையும் சுற்றிப் பார்த்தான். அவள் கூறியது போல் எந்த திவியும் இல்லை. அப்பொழுது தான் புரிந்தது, அவள் குறிப்பிட்ட அந்த பெயர் அவளது வாகனம் என்று.

"தெரியாம மோதிட்டேன், சாரிங்க..." என்றான், அளவிற்கு அதிகமாகவே அடி வாங்கியிருந்த அந்த வாகனத்தைப் பார்த்து.

அலைபாயுதே (Completed)Opowieści tętniące życiem. Odkryj je teraz