"அவன் போன் போட்டானா ரோஹி?"
"போடலையே அத்தை" பதில் கொடுத்தவளின் கண்கள் தினசரி செய்தித்தாளின் விளையாட்டு பக்கத்தை அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்தது.
"இவனுக்கு இதே வேலை. இத்தனை நாள் சரி, கல்யாணம் ஆனதுமாவது உனக்காச்சும் போன் பண்ணி பேசணும்ல."
கவனமே இல்லாமல், "ம்ம்" கொட்டியவள் விளையாட்டு செய்தியில் இருந்த மட்டைப்பந்து தொடர்பான செய்தியை ஒவ்வொரு வரியாக வாசித்தாள். அவன் பெயர், அவன் பெயர் என கடலின் ஆழம் சென்று தேடியவளுக்கு அஸ்வின் என்ற பெயரை பார்த்ததும் அத்தனை உவகை முகத்தில்.
"எண்ணெய் ரொம்ப நேரம் வச்சிருக்காத ரோஹி. ஜுரம் வந்துடும், அப்றம் உன் வீட்டுக்காரன் என்கிட்ட தான் ஆடுவான், போய் குளி."
தான் அவசரப்படுத்தியதற்கு எந்த பதிலும் வராமல் போக மருமகள் கொடுத்த கற்றாழை எண்ணெயை சீராக தலையில் தேய்த்து தலை சாய்த்து படுத்திருந்தவர் கண்களை திறந்து பார்க்க, மருமகள் அந்த நாளிதழில் மூழ்கி கிடந்தாள். விட்டால் குப்புற கவிழ்ந்து அதனுள்ளே குதித்துவிடுவாள் போல்.
"என்ன பண்ற அண்ணி?" வீட்டிற்குள் நுழைந்த சித்தார்த் அவளை பார்த்த மாத்திரம் சிரித்துவிட்டான்.
இருவர் அழைத்தும் மௌனமே வர, அவளை நோக்கி நடந்தவன் அவள் தலையை மெல்ல ஆட்டினான். அவன் கையை தட்டிவிட்டவள் சுருங்கிய முகத்தோடு தலையை தூக்கினாள்.
"உன் அண்ணன் இப்ப இன்னைக்கு தான் டீம் கூட பிராக்டிஸ் பண்ண போயிருக்கார். ஆனா ஏன் பொய் சொன்னார்?"
மதி மருமகளின் ஏக்கத்தில் மகிழ்ச்சி பெருக பேச்சற்று அமைதியானார். சித்தார்த் மனமும் நெகிழ்ந்தாலும் கோணல் சிரிப்போடு, "ஒருவேளை யாரையாவது பாக்க போயிருப்பானோ?"
"யவ்னிகாவா இருக்குமோ?" சோகம் கண்களில் இழையோட அவள் கேட்பதை பார்த்து மதிக்கு அந்த வருத்தம் தொற்றிக்கொண்டது.
"அவ்ளோ வருத்தம், சந்தேகம் இருந்தா நீயே அவனுக்கு போன் பண்ணி கேளேன்" என்றவர் குரலில் இளைய மகன் மேல் சிறு கோவமும் வந்தது.
![](https://img.wattpad.com/cover/352506010-288-k411315.jpg)
YOU ARE READING
அலைபாயுதே (Completed)
Romanceஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம் விரித்து அவன் மார்புக்கு வழி காட்டினான். ஒரு பக்கம் மெல்ல தலை அசைத்து தன்னுடைய மறுப்பை காட்டினாள்...