அலை - 3

367 14 1
                                    


உல்லாசமாக விசிலடித்து வீட்டிற்குள் நுழைந்தவன் நாசி நுகர்ந்த வாசனையில், நேராக சென்று நின்றது அன்னை இருக்கும் சமையலறைக்கு தான். மகனுக்காக தானே நின்று, பார்த்து பார்த்து பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்தார்.

"ம்மா, பசி வர வச்சிடுறிங்க..." அன்னையைக் குற்றம் சாட்டி, கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் சமையல் மேடையிலே போட்டு, அன்னையின் கை வண்ணத்தில் உருவான உணவை ருசிக்க துவங்கிவிட்டான்.

"எல்லாம் பாத்து பாத்து தான் செஞ்சிருக்கேன், தைரியமா சாப்பிடுடா."

அவன் விருப்பத்திற்கிணங்க உணவை பரிமாறியவர், அவன் வசதியாக அமர அவனது பொருட்களை அப்புறப்படுத்த துவங்கினார் திட்டிக்கொண்டே. "பாரு, ஒரு பொருளை ஒழுங்கா வைக்க தெரியுதா உனக்கு? எல்லாம் அப்டி அப்டியே போட்டுட்டு போய்டுறது. ஒழுங்கா டிகிரி முடிச்சிருந்தா இப்டி பண்ணிருக்க மாட்ட."

ஏழு வருடங்கள் முன்பு தன்னுடைய படிப்பு, எதிர்காலம் அனைத்தையும் துறந்து, முழு மூச்சாக விளையாட்டில் கவனம் செலுத்தத் துவங்கினான்.

"என்ன மதி, எதுக்கு இப்ப அதெல்லாம்? படிச்சிருந்தா கூட இந்நேரம் இவ்ளோ சம்பாதிச்சிருக்க மாட்டேன். மாசம் சம்பளம், ப்பைட் பார்ட்னர்ஷிப், ப்ராண்ட் அம்பாசிடர், ஆட், லான்ச் ஈவென்ட்ஸ்னு எனக்கே கணக்கு இல்லாம போய்கிட்டு இருக்கு. இப்படிப்பட்ட நிலைமைலயும் அந்த டிகிரிதான் உங்களுக்கு பெருசா படுதா?"

அன்னையோ சமாதானம் ஆகவில்லை. நாட்டின் மிகப் பெரிய பிரபலம், ஒரு டிகிரி படிக்கவில்லையா என பலரும் அவர் காது படவே பேசிவிட்டனர்.

சிலர் ஒரு படி மேலே சென்று, "ஆனாலும் டிகிரி முடிச்சிருக்கலாம் மேடம்." நேரடியாக வத்திவிட்டு சென்றுவிட, அன்று முழுதும் வீட்டினர் மதிவர்தினியின் புலம்பலைக் கேட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும்.

"ஆமாடா, எனக்கு அதுதான் பெருசு. இப்ப கூட ஒன்னுமில்ல, கரஸ்லயாவது ஒரு டிகிரி வாங்கேன் அஸ்வின். அம்மா பெருமையா வெளிய சொல்லிக்குவேன்ல?" மகனின் நாடி பிடித்து கெஞ்சினார் மதி.

அலைபாயுதே (Completed)Where stories live. Discover now