8

2K 130 56
                                    

அடுத்த நாள் காலையில் ஜீவிதா நன்றாக அசந்து உறங்கிக்கொண்டிருந்தவள் கனவில் விஜய் தேவரக்கொண்டா உடன் டூயட் பாட அவள் முகத்தில் மட்டும் பன்னீர் தெளித்தது போல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் என்ன ஓவரா பன்னீர் தெளிக்குறாங்க என்று நினைத்தவள் கண்ணை திறக்க ஜான்வியோ தண்ணீர் தெளித்து தெளித்து சோர்ந்தவள் பக்கெட்டில் தண்ணீருடன் நின்றிருந்தாள் அவள் மேல் ஊத்துவதற்கு.

ஜீவிதாவோ அலறி அடித்து எழுந்தவள் "அடியே அரை அடி ஏன் டி என்ன எழுப்பி விட்ட ?"என்க

மணியை பார்க்க அதுவோ எட்டு என்று காட்டியது. நேற்று உறங்க இரண்டு மணி ஆனதால் அசதியோடு உறங்கிக்கொண்டிருந்தவள் மீண்டும் இவள் எட்டு மணிக்கு எழுப்பவும் கொலைவெறியோடு அவளை முறைக்க ஜான்வியோ தன் முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி சிரித்தவள் "ஜீவி கொஞ்சம் போய் ரெடி ஆகிட்டு வாயேன் "என்க

ஜீவிதாவோ அவள் தலையிலேயே கொட்டியவள் "எரும எரும எதுக்கு டி பதினோரு மணி ஷிப்ட்டுக்கு இப்போவே நா ரெடி ஆகணும் "என்க

ஜான்வியோ பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு "அது... இல்லடி அவரை பாக்க போகேல நா மட்டும் போனா கண்டு புடுச்சுருவாருல்ல அதான் "என்க

ஜீவிதாவோ இவளை கொன்றுவிடலாமா என்று முறைத்தாள் அவள் கழுத்தருகில் கையை கொண்டு சென்றவள் பின் விலக்கிக்கொண்டு "உன் போதைக்கு நா ஊறுகாயா டி."என்க

ஜான்வியோ அவளின் தாடையை பிடித்து கொஞ்சியவள் "என் பட்டுக்குட்டில புஜ்ஜுக்குட்டில போய் ரெடி ஆகுடி செல்லம்"என்று

கூற

ஜீவிதாவோ அவள் கையை விலக்கியவள் "வந்து தொலையுறேன் ஆனா இப்டி அசிங்கமா கொஞ்சாத "என்று விட்டு குளிக்க உள்ளே செல்ல

ஜான்வியோ " ஈஈ லவ் யு டி செல்லம்" என்று கூறியபடி தயாராகினாள் .இருவரும் பிரவீனிடம் வாய்க்கு வந்த காரணத்தை சொல்லி விட்டு கிளம்பி சென்றனர் .

சரியாய் அந்த பாலத்தின் முன் இருந்த escalator அருகில் இவர்கள் வருகையில் கௌதமும் வந்திருந்தான் .ஜான்வியோ ஜீவிதாவின் தோளில் இடித்தவள் "ஹே முன்னாடி போடி எதேர்ச்சியா அவன் கண்ணுல படுற மாறி "என்க

தோழனா என் காதலனாWhere stories live. Discover now