22

1.9K 119 82
                                    

தான் கௌதமின் மேல் கொண்ட காதலை ஜான்வி உணர்ந்திருக்க கெளதம் அங்கு பேருந்து நிலையத்திலிருந்து தான் தங்க book செய்திருந்த oyo அறைக்கு வந்தவன் இருந்த அயர்வில் அப்படியே மெத்தையில் விழுந்தான்.

ஒரு மாதமாக ஓவர் டைம் பார்த்தது அதன் பின் அப்படியே இந்த பயணம் அவனை அலைக்கழித்து இருந்தது.ஒரு மாதம் முன் நடந்த நிகழ்வுகள் கன் முன் தொன்றியது.அவனின் தமக்கைக்கு குழந்தை பிறந்து நான்கு மாதம் கழிந்து இருக்க அன்று ஞாயிற்று கிழமை காலையில் எழுந்து வந்தவனை வரவேற்றது என்னவோ வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்த வீட்டு உரிமையாளர் தான்.

அவரை பார்த்து முருவலித்தவன் தான் தந்தையை என்ன என்பதை போல் பார்க்க அதற்குள் அந்த உரிமையாளர் பேசத்துவங்கினார்."இதோ பாரு கெளதம் உங்க குடும்பம் இது வரைக்கும் எந்த சண்டை சச்சரவும் இல்லாம இருந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் இத்தனை வருஷமா வாடகை கூட எத்தாம வச்சிருந்தேன். ஆனா உங்க அம்மா உன் அக்கா வலைகப்புக்காக  என்கிட்ட 50 ஆயிரம் ரூபா கடனா வாங்கி ஆறு மாசம் ஆச்சு .இன்னும் வட்டியும் குடுக்கல அசலும் குடுக்கல ."என்க அவனிற்கோ இது புதிய செய்தி.

எதற்காக கடன் வாங்கினார் நான் தான ஒரு லட்சம் கொடுத்தேனே என்று நினைத்தபடி அவரை பார்க்க அவரோ அலட்சியமாக நின்று இருந்தார்.அந்த உரிமையாளர் மேலும் தொடர்ந்தார்"என் பொண்ணுக்கு அடுத்த மாசம் college fees கட்டணும் பா வட்டி கூட வேணாம் அசல் மட்டும் கட்டிரு "என்று கூறிவிட்டு செல்ல அவனுக்கோ தலைவலியே வந்து விட்டது.

அவனின் தமக்கையின் திருமணத்திற்காக எடுத்த லோன் இன்னும் ஓடிக்கொண்டிருக்க அவன் கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் கணிசமான வருமானத்தில் சேர்த்து வைத்த ஒரு லட்சத்தை ஐந்து மாதத்திற்கு முன் வாங்கி விட்டார்கள்.அதன் பின் பிரசவம்,குழந்தைக்கு செய்முறை என்று சம்பலப்பணம் அதிலே செலவாகி விட  .இப்பொழுது தான் அங்கு பிரட்டி இங்கு பிரட்டி இருபதாயிரம் வரை சேர்த்து வைத்தான்.அவன் சம்பளம் முப்பதாயிரம் தான்.அவனின்
தந்தை ஓய்வூதியம் பத்தாயிரம் தான்.இன்னும் வீடு செலவுக்கு பத்தாயிரம் வேண்டுமே என்று யோசித்துக்கொண்டு இருந்தவன் அப்படியே கிளம்பி அலுவலகம் வந்து அடைந்தான்.அவனின் அன்னையிடம் என் என்று கேட்க வில்லை.கேட்டாலும் பதில் வரப்போவதில்லை

தோழனா என் காதலனாWhere stories live. Discover now