39

2.4K 123 129
                                    

இருவரும் உண்டு முடித்து உறங்க தங்கள் அறைக்கு சென்றனர் .ஜான்வி ஒரு ஓரத்தில் படுத்தவள் தன்னோடு ஹாஸ்டலில் இருந்து கொண்டு வந்த பெரிய சைஸ் teddybearரை அருகில் போட்டு கட்டிபிடித்துக் கொள்ள கௌதமோ அவளின் செய்கையில் அந்த teddybearai முறைத்தவன்" எங்க இருந்து தான் எனக்குன்னு எதிரிங்க வருதுன்னே தெரில" என்று கூறியபடி அதை அவள் கையில் இருந்து பறித்து கீழே போட்டான் .

தனது டேட்டிபெயரை பறித்து கீழே போட்டு விட்டான் என்று கோபத்தில் எழுந்து அமர்ந்தவள் "எருமை teddybearah குடு டா எனக்கு தூக்கம் வராது அது இல்லாம "என்று கூற

கௌதமோ அவள் அருகில் கட்டிலில் அமர்ந்தவன் "இந்த பெட்ல மனஷன்களுக்கு தான் இடம் அதுக்கெல்லாம் இல்ல "என்று கூறி படுத்துக்கொள்ள

அவளோ இடுப்பில் கை வைத்து முறைத்தவள் "டேய்ய் அநியாயம் பண்ணாத டா அது இல்லாம எனக்கு தூக்கம் வராது டா "என்று கூற கெளதம் அப்படியா என்பதை போல் பார்த்தவன் அவள் கையை பற்றி இழுத்து தன் மேல் விழ வைக்க ஜான்வியோ அவன் செயலில் விழி விரித்து பார்த்தவள் அவனின் அருகாமையில் வழக்கம் போல் இதயம் தடதடக்க ஆரம்பிக்க மிரட்சியோடு அவனை பார்த்தாள்.

அவள் பார்வையில் புன்னகைத்தவன் "இனி அது தேவைப்படாது தூங்கு "என்று தன்னோடு அவளை சேர்த்து அனைத்துக் கொள்ள முதலில் அவன் அருகாமையில் உடல் உதறியபடி இருந்தவள் பின் சற்று நேரத்தில் இயல்பாகி அவன் முகத்தை பார்த்தாள் .நிர்ச்சலனமாய் உறங்கி கொண்டிருந்தான் கெளதம் .முகத்தில் என்றையும் விட இன்று சிந்தனை ரேகைகள் அகன்று நிம்மதி நிலவுவது போல் தோன்றியது ஜான்விக்கு .காற்றில் அசைந்தாடும் அவன் கூந்தலை ஒரு சிரிப்புடன் களைத்து விட்ட ஜான்வி அவனோடு ஒன்றியபடி அவன் அணைப்பில் கண்ணயர்ந்தாள்.

அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் கெளதம் ஆறரை மணிக்கு எழுந்தவன் அருகில் தன் இணையை தேட அவள் படுத்திருந்த இடமே வெற்றிடமாய் இருந்தது ."எங்க இவ?எப்போவும் எட்டு மணி தான எந்திரிப்பா?"என்று நினைத்தவாறு எழுந்தவன் சென்று பல் துலக்கி முகம் கழுவி வெளியில் வர காபி மனம் நாசியை துளைக்க எழுந்து அடுப்படிக்கு சென்றான் .

தோழனா என் காதலனாWhere stories live. Discover now