9

2K 121 99
                                    

அன்று காலையில் நேரமே எழுந்த ஜான்வி குளித்து தயாராக ஜீவிதாவோ தானும் எழுந்து குளிக்க சென்றாள்.

ஜான்வி "ஹே ஜீவிமா நீ ஏன் இப்போவே எந்திரிக்குற ?"என்க

ஜீவிதாவோ அவளை குழப்பமாய் பார்த்தவள் "என்னடி நேத்து தான கெளதம் ப்ரோ சொன்னாரு இன்னைக்கும் வருவேன்னு. நீயும் அதுக்கு தான கெளம்புற? எப்படியும் நீ எழுப்பி விடுவ தான் நானே கெளம்பலாம்னு "என்க

ஜான்வியோ அவள் அருகில் வந்தவள் அவள் தோளை பற்றி "ஜீவி குட்டி அது நேத்து இது இன்னைக்கு .ஒரு லவ் பர்ட்ஸுக்கு உள்ள நீ வரலாமோ ?சின்ன புள்ள கெட்டு போயிருவ அதுனால நீ ஆற அமர தூங்கி எந்திருச்சு பதினோரு மணிக்கு வருவியாம் நா மட்டும் இப்போ போய் சைட் அடிப்பேனாம் "என்க

ஜீவிதாவோ கீழே ஏதேனும் கிடைக்கிறதா என்று தேடினாள்.அவள் தேடுவதை பார்த்த ஜான்வி "என்ன செல்லம் தேடுற ?"என்க

அவளோ "ஆங் ஏதாச்சும் அருவாள் இருக்கானு பாக்குறேன் உன்ன வெட்டிட்டு ஜெயிலுக்கு போனாலும் பரவா இல்லடி பிசாசே "என்று

அவளை கீழே இருந்தா பாட்டில்ஐ வைத்து அடிக்க வர ஜான்வியோ அய்யயோ என்று பதறி தனது கை பையை எடுத்தவள் ஒரே ஓட்டமாய் அறைக்கு வெளியில் ஓடி விட்டாள் .

பின் மூச்சு வாங்கிய ஜீவிதா தனது படுக்கைக்கு வந்து அமர கதவை லேசாய் திறந்த ஜான்வி "ஜீவிமா "என்று கூப்பிட

ஜீவிதா "என்னடி ?"என்க

அவளோ இளித்தவள் "அது.... பிரவீன சமாளிச்சுரு டி "என்றவள்

அவள் "அடிங்குஹ்......." என்று கூறுவதற்கும் சிட்டாய் பறந்து வெளியே ஓடி விட்டாள் .

அவள் ஓடியதை பார்த்து சிரித்த ஜீவிதா அதன் பின்னே பிரவீனின் ஞாபகம் வர அவனிற்கு அழைத்தாள் .அவள் அழைத்த இரண்டு ரிங்கிலேயே எடுத்தவன் "சொல்லு கொரங்கு என்ன திடீர்னு கால் "என்று பழைய துள்ளலுடன் பேச அவளிற்கு அப்பொழுதே நிம்மதியாய் இருந்தது

ஜீவிதாவும் அவனை வம்பிழுக்க நினைத்தவள் "ஆங் அது ஒண்ணுமில்ல நேத்து நைட் ஒரு குழந்தை உக்காந்து என் சாக்கிய அவன் புடுங்கிட்டான் அப்டினு தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்துச்சு அதான் சாக்கி கெடச்சுதா அப்டினு கேக்க கூப்பிட்டேன் "என்க

தோழனா என் காதலனாWhere stories live. Discover now