30

1.8K 113 54
                                    

எதையோ நினைத்து சிரித்துக் கொண்ட ஆதி தனது அலைபேசியை எடுத்து தனது அத்தை ரேவதிக்கு அழைப்பு விடுத்தான் .

ரேவதி பூஜை அறையில் இருந்து அப்பொழுதே வெளியில் வந்தவர் ஆதியின் என்னை பார்த்ததும் ஒரு நொடி குழம்பினார் இவன் காரியம் இல்லாம கால் பண்ண மாட்டானே என்று .அவர் யோசனையோடு தனது காதில் வைத்து "ஹலோ சின்னு "என்று கூற

அவனோ முயன்று வரவழைத்த குதூகலத்தோடு "ஹலோ அத்த எலா உன்னாரு மீறு? (எப்படி இருக்கீங்க நீங்க ?)"என்று கேட்க

அவரோ "ஹான் நல்லா இருக்கேன் சின்னு என்ன திடீர்னு கால் பண்ணிருக்க ?"என்று கேட்க

அவனோ "அத்தை அப்பா ஜான்விக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சுருக்காரு அண்ட் அவளும் இந்த தடவ ஓகே சொல்ல போறாளாம் மாப்ள பாக்குறதுக்கு "என்று கூற

அவரோ உற்சாகம் வடிந்த குரலில் "இப்போ அதுக்கு என்ன சின்னு ?"என்று கேட்க

அவனோ "அட என்ன அத்த நீங்க ,அபி பாவா க்கு இப்போ ஜானுவை பொண்ணு கேட்கலாமே "என்று கேட்க

அவரோ "அவ தான் இஷ்டம் இல்லனு சொல்லிட்டாளே சின்னு "என்று கூற

அவனோ "ஐயோ அத்த அவ அபி பாவாவை புடிக்கலைனா சொன்னா? இப்பதைக்கு கல்யாணம் வேணாம்னு தான சொன்னா? இப்போ தான் அவளே ஒகே அப்டினு சொல்லுறாளே. நீங்க அபி பாவாவுக்கு இப்போ பொண்ணு கேட்டா ஓகே ஆயடுமே "என்று கூற அவரின் மனமும் அதே கணக்கை தான் போட்டது.

தான் நினைத்ததை போல் ஜான்வியை மருமகள் ஆக்கி விடலாம் என்று நினைத்தவர் அவன் அதிக நேரம் அவர் பேசாமல் அமைதி காத்ததால் "ஹலோ ஹலோ "என்று கத்தும் பொழுதே சுயநினைவுக்கு வந்தவர் "நல்ல ஐடியா சின்னு அபி வேற ப்ரொஜெக்ட்டுக்காக us போயிருக்கான் கால்ஸ் அட்டென்ட் பண்ண மாட்டேங்குறானே ?"என்று கூற

அவனோ மனதில் அதுனால தான இப்போ பொண்ணு கேக்க சொல்றேன் என்று நினைத்தவன் "நீங்க வாங்க அத்த பாவா உங்க பேச்சு மீரியா நடந்துக்க போறாரு

"என்று கூற

அவரும் "இதோ இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன் சின்னு "என்று கூறி அழைப்பை துண்டித்தார் .

தோழனா என் காதலனாWhere stories live. Discover now