14

1.8K 133 79
                                    


ஒரு வாரம் அப்படியே செல்ல கௌதமிற்கு உண்மையிலேயே அடுத்த வாரம் வியாழனன்று ஒரு மீட்டிங் இருந்தது கோயம்பத்தூரில் .அடுத்த நாள் வெள்ளியன்று அவளை சந்தித்து பேசலாம் என்று முடிவெடுத்து அதை ஜான்வியிடமும் கூறி விட்டான் .இருவரும் அங்கிருந்த ஒரு பிரபலமான மாலில் சந்திப்பதாக திட்டமிட்டுக்கொண்டனர்.நாட்கள் அதன் போக்கில் செல்ல ஜான்விக்கு அவனிற்காக ஏதாவது வாங்க வேண்டும் பரிசாக என்று தோன்றியது .

ஆனால் என்ன வாங்குவது என்றே தெரியவில்லை.அன்று சனிக்கிழமை ஆதிக்கு அன்று கல்லூரி இருந்ததால் அவன் சென்று விட அவளின் தந்தை அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தார் .அப்பொழுது ஜான்வி தொலைக்காட்சியில் ஜாக்கி சான் பார்த்துக்கொண்டிருந்தவள் திடீரென அவள் அருகில் வந்தார் ."ஜான்வி "என்க

அவளோ "ம்ம் சொல்லுங்க "என்றாள்

அவர் "ஏதாச்சு வாங்கிட்டு வரட்டுமாடா வரேல ?"என்க

அவளோ பட்டும்படாமல் மண்டையை ஆட்டினாள் "இல்ல எனக்கு வேணாம் "என்று கூற அவர் வழக்கம் போல் சென்று விட அவளோ மீண்டும் தனது தொலைகாட்சி பெட்டியில் மூழ்கினால் .அவளின் செய்கைகளை பார்த்துக்கொண்டிருந்த பார்வதிக்கு தான் மனது சற்று பாரமாக போனது .பின் மணி ஆக தனது வேலைக்கு கிளம்பியவள் அலுவலகத்திற்கு சென்று தனது வேளைகளில் மூழ்கி போனாள் .

அன்று கௌதமோ அலுவலகத்திற்கு வந்தவன் எப்பொழுதும் போல் கடுமை இருந்தாலும் அதில் சிறிது புன்னகையும் இருந்தது .அங்கே சென்றவன் வேலைகளை பார்க்க அவனின் அஸ்சிஸ்டான்டை அழைத்தான் .ரோகினி என்று அவளோ நடுங்கியபடி வந்தவள் "என்ன சார் ?"என்க

அவனோ "reports கேட்ருந்தேனே எங்க ?"என்க

அவளோ சுத்தமாக மறந்திருந்தாள் .அவள் திருதிருவென்று முழிக்க அவனோ சிறிது குரல் உயர்த்தியவர் "எங்க ?"என்று கேட்க

அவளோ "அது.... சார் சாரி சார் மறந்துட்டேன் "என்க

அடுத்து அவனிடம் இருந்து திட்டு பயங்கரமாய் விழும் என்று நினைத்தவள் கண்களை மூட அவனோ திட்ட நினைத்தவன் அதன் பின் ஜான்வி கூறிய குணமா சொல்லலாம்ல என்ற வாக்கியம் நினைவில் வர தன் பின் கழுத்தை அழுத்தி தேய்த்து கோபத்தை கட்டுப்படுத்தியவன் "இன்னும் அரை மணி நேரத்துல reportah கொண்டு வாங்க இப்போ போங்க "என்று விட்டு நகர

தோழனா என் காதலனாWhere stories live. Discover now