25

1.9K 120 94
                                    

அவளை அனுப்பி வைத்து விட்டு பேருந்தில் பயணித்த கௌதமின் நினைவுகள் எங்கும் ஜான்வியை நிறைந்திருந்தாள்.எப்போ அவளை காதலிக்க ஆரம்பிச்சேன் ?முதல் தடவ அவளை சின்ன குழந்தை மாதிரி பலூன் வாங்கிகிட்டு இருந்தப்பவா ?அவள் பண்ணுற சேட்டையை பாக்குறதுக்காகவே அந்த டீ கடைக்கு பொய் உக்காருவேனே அப்போவா?முதல் தடவ பாக்கேல என்ன நிமிர்ந்து கூட பாக்காம சாப்டுட்டு இருந்தாலே அப்போவா ?இல்ல பேய் படத்துக்கு பயந்து என் கைய புடுச்சுக்கிட்டு இருந்தாலே அப்போவா ?

எதுக்காக அவளை பாக்கணும் அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் அப்டினு எனக்குள்ள அவளுக்கான தேடல் இருந்துகிட்டே இருந்துச்சு ?

என்று யோசித்தவன் தனது கைப்பேசியில் இருந்த அவளின் சிரிப்பு நிறைந்த குழந்தை முகத்தை பார்த்தவன் அதை வருடியவாறு "என்னவோ பண்ணிட்ட டி என்ன .எனக்குள்ளேயே இறுகி இருந்த என்ன தானாவே உன்னோட எல்லாத்தையும் பகிர்ந்துக்க வச்ச ,உன்னோட ஒரு வார்த்தைல நீ எல்லாம் செய்ய வச்ச , நா என்னடா வாழ்க்கைனு நெனைக்குறப்போ எல்லாம் உன்னோட சேட்டையால தான் உயிர்ப்போடயும் துடிப்போடயும் இருக்க வச்ச "என்று நினைத்தபடி அவளது வதனத்தை தொடுதிரையில் வருடிக்கொண்டிருந்தவனின் கை பட்டு அவள் புகைப்படம் மாறி அவனும் அவனின் தந்தையும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வர சட்டென்று முகம் மாறியது கௌதமிற்கு .

என்ன செய்துகொண்டிருக்கிறேன் .அனாதையா இருக்க வேண்டிய என்ன எடுத்து வளர்த்து படிப்பு குடுத்து அவரோட மகன்னு அடையாளத்தை குடுத்து வளர்த்த என் அப்பாவுக்கு துரோகம் பண்ண போறேனா இப்போ வந்த இந்த காதலுக்காக?என்று புத்தி சொல்ல

மனமோ "அப்போ ஜான்வியை விட்டு குடுக்க போறியா ?அவளை இன்னொருத்தனுக்கு சொந்தமா உன்னால பாக்க முடியுமா ?"என்று கேட்க உடனே அவன் மனம் பதிலளித்தது முடியாது என்று .

மனசாட்சி "உங்க அப்பாவுக்கு செய்ற துரோகமா ஏன்டா இதை நெனைக்குற ?எந்த காலத்துல இருக்க நீ ?காதலிக்கிறது ஒன்னும் தப்பு இல்ல உன்னால அவளை தவிர்த்து யார் கிட்டயும் ஒழுங்கா பேசவே முடியாது நீ அவளை மறந்துட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிருவியா ?"என்று கிண்டலடிக்க

தோழனா என் காதலனாWhere stories live. Discover now