அப்படியே நாட்கள் சென்றது...
மது இப்போதெல்லாம் ஆதவை பார்ப்பதே இல்லை...
சொல்லப்போனால் திருமணத்தின் அன்று பார்த்ததோடு சரி அதற்குப் பின் அவள் அவனைப் பார்க்கவே இல்லை..
அவன் எப்போது வருவான் எப்போது போவான் என்பது அவளுக்கு தெரியாது ஏன் இங்கேதான் இருக்கின்றன என்பது கூட அவளுக்கு தெரியாது....அவளின் ஒரே ஆதரவு அவளின் அத்தை தான் இப்போதெல்லாம் அதிகம் பாசம் காட்டுகிறாள் தனக்கு சிறு தலைவலி என்றால் கூட அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை பதறி விடுகிறார் துடித்துப் போகிறார் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.....
மது ஏது கேட்டாலும் சுதா இல்லை என்று சொல்லவே மாட்டார்...இப்படியே நாட்கள் நகர ஒருநாள் மதுவிற்கு யோசனை வந்தது வீட்டிலேயே இருப்பதைவிட வேலைக்கு சென்றால் என்ன... தான் மனதிற்கு மாற்றம் கிடைக்கும் என நினைத்தாள் இதை அத்தையிடம் சொன்னால் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார் எப்படியாவது அடம்பிடித்து அத்தையை சம்மதிக்க வைத்து விடலாம் என்கிற நம்பிக்கையில் மேற்கொண்டு வேலைகளை செய்ய தொடங்கினாள்..
தினநாழிதலில் வேலைகளை தேடத் தொடங்கினாள்..அபோதுதான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தால் அது ஆதவ் குரூப் ஆப் கம்பெனி யின் விளம்பரம் அதில் பர்ஸனல் பி ஏ பிரிவிற்கான இடம் காலியாக உள்ளதை குறிப்பிட்டிருந்தது
நேர்முகத் தேர்வையும் அந்த நாளையும் அதில் குறிப்பிட்டிருந்தது..
அவளுக்கு அவனுடைய திறமை மேல்மேல் முழு நம்பிக்கை இருந்தது இந்த வேளையில் தான் தேர்வாகி விட்டால் ஆதவ்வின் மனதை மாற்ற முயற்சி செய்யலாம்.
நான் எந்தளவுக்கு அவனை காதலிக்கிறேன் என்று அவன் அறிவதற்கும் ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என எண்ணினாள்... தான் வேளைக்கு செல்ல முடிவு செய்த விஷயத்தை அத்தையிடம் கூறினால்..சுதா முதலில் சம்மதிக்கவில்லை என்றாலும் அவளின் பிடிவாதத்தினால் வேறு வழி இல்லை என்று சம்மதித்தார்....
YOU ARE READING
உன் பார்வை ஒன்றே போதும் அன்பே...
Romanceதிருமணத்தில் மோதலில் தொடங்கி காதலில் முடியும் இரு மனதை சொல்லும் கதை