அன்று இரவு அவன் கிளம்புவதற்கு முன்னதாகவே மது கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டால் ஆபீஸில் அவனிடம் தலைவலி அதனால் வீட்டுக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டால் அவன் காரில் டிரைவரிடம் சொல்லி வீட்டில் விட சொல்கிறேன் என எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை பிடிவாதமாய் பஸ்ஸிலேயே போகிறேன் என கிளம்பிவிட்டால் அவளை கட்டாய படுத்த வேண்டாம் என்று அவளை அவள் போக்கிலே விட்டு விட்டான்.....
ஏனோ மதுவிற்கு இன்று மனதில் அமைதி இல்லை மனதில் எதோ ஒரு விதமான நெருடல் இருந்து கொண்டிருந்தது
மதுவால் ஆஃபீஸ்ல் இருக்க முடிய
வில்லை அதனாலே தனக்கு தலை
வலி என ஆதவ் விடம் பொய் சொல்லி
விட்டு வந்தால்.......தான் மனதில் இருப்பதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது
ஆதவ் விடம் இதை பற்றி பேச முடியாது.....தயாவிடம் பேசலாம் என தோன்றியது அவனுக்கு போன் செய்தால்
எதிர்முனையில் தயா போனை
எடுத்தான்... என்ன ஆச்சரியமா இருக்கு மேடம்கு திடீர்னு என் ஞாபகம்...மறுமுனையில் எந்த பதிலும் இல்லை....
என்னடி ஆச்சு ஏன் அமைதியாய் இருக்க..... ஏதாவது பிரச்சினையா......
இப்போதும் எந்த பதிலும் இல்லை.....
மித்ரா....
லைன்ல இருக்கியா என்ன அவன் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது......உம்..... லைன்ல தான் இருக்கான் தயா......
என்ன ஆச்சு நான் உன்ன பாக்கணும்.......
YOU ARE READING
உன் பார்வை ஒன்றே போதும் அன்பே...
Romanceதிருமணத்தில் மோதலில் தொடங்கி காதலில் முடியும் இரு மனதை சொல்லும் கதை