அவளால் அவள் கண்களையே நம்ப முடியவில்லை..
தன் உயிர் தோழன் தனது சுக துக்கங்களில் பங்கு கொண்டவன் தன் கண்ணில் நீர் வந்தல் அவன் மனம் தாங்காது சிறுவயது முதல் உள்ள நட்பு அனைவரையும் பொறாமை பட வைக்கும் அளவுக்கு என் மேல் அவனுக்கு உள்ள அன்பு...
தன் திருமணத்தன்று வெளிநாட்டில் இருந்தான் திருமணத்திற்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் அவன் வரவில்லை ஆனால் மது அதை ஏற்றுக்கொள்ளவில்லை அவன் மேல் படு கோபமாக இருந்தாள் அவளின் திருமண போட்டோவை ஒன்றைக்கூட அவனுக்கு அனுப்பவில்லை தயவும் பலமுறை கெஞ்சி பார்த்து விட்டான் அதை எதையும் காதுகொடுத்து கூட கேட்கவில்லை மது... அவள் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் கட்டளையிட்டு இருந்தால் தன்னை மீறி எதையும் செய்யக்கூடாது என்று....அவளின் கட்டளையை மீறி யாரும் எதுவும் செய்யவில்லை.
கடைசியில் சாராவிடமும் கெஞ்சி பார்த்தான் அவளும் அக்காவுக்கு சப்போர்ட்டாக இருக்க தயாவிற்கு உதவி செய்யவில்லை...
அவனை வெகு நாட்கள் கழித்து பார்த்த மதுவிற்கு அவன் மீது இருந்த கோபம் நொடியில் மறந்து போனது தயா என அவனை அணைத்துக் கொண்டு அழுதே விட்டாள் ஏன் டி மித்து அழற என் மேல இருந்த கோபத்துக்கு என்ன நீ அடிச்ச கொன்னுடுவியோன்னு நினைச்சேன்..... ஆனால் நீ என்னென்ன அழற அவளின் அழுகை அப்போதும் நிற்கவில்லை ......
மித்துமா அழத அதான் நான் வந்துட்டேன்லா என்று அவளின் தலையை ஆதரவாக கோதி விட்டான்...
YOU ARE READING
உன் பார்வை ஒன்றே போதும் அன்பே...
Romanceதிருமணத்தில் மோதலில் தொடங்கி காதலில் முடியும் இரு மனதை சொல்லும் கதை