யாதிரா - 1

1.6K 79 25
                                    

குண்டூசி ஸைசில் ஒரு பொட்டை தன் நேர்த்தியான இரு புருவங்களின் நடுவில் பொருத்தினாள் யாதிரா. பொட்டு வைப்பது கூடாது தான் இருந்தாலும் இருக்கண்களும் நெற்றியும் மட்டும் தெரியும் இந்த மாஸ்க் முகத்தை கொஞ்சம் பரிட்சயமான முகமாய் மாற்ற இப்பொட்டு உதவியது. அதன் பின் N95 mask ஐயும் face shield ஐயும் மாட்டிகொண்டு இவ்வீராங்கணை போர்களத்துக்கு உற்சாகமாய் துள்ளியோடினாள். எமெர்ஜன்சி வார்ட் இல் இவள் தான் ராணி, இவள் தான் இப்போரை வழிநடத்தும் அதிகாரி. காலை 8 மணிக்கு தொடங்கிய இவளின் ஷிப்ட் அன்றைய நாளின் பூகம்பத்தை காட்டிக்கொடுக்கவில்லை. எப்போதும் போல் பாம்பு கடியும், கையை வெட்டிகொண்ட இளசுகளும், வழுக்கிவிழுந்த பெருசுகளும், திடீர் வயிற்று வலியைக் கண்டு பயந்தவர்களுமாய் நாள் துவங்கியது.

மருத்துவர் இவளுக்கு இது பழக்கப்பட்டதாயினும் நோயாளிகளுக்கு இது புதிது அதுவும் சிலரின் வாழ்க்கையின் மீள முடியா துயரத்தின் துவக்கம் இது என அறிந்தவள் ஒவ்வொரு நோயாளியையும் முழுமனதாய் கவனித்துக்கொண்டிருந்தாள். அஜீரணத்தால் நெஞ்சு வலியோடு வருபவனையும் ஹார்ட் அட்டாக்கால்(heart attack) நெஞ்சைப் பிடித்துகொண்டு வருபவனையும் சரியான நேரத்தில் பிரித்து தகுந்த முதற்படி சிகிச்சை வழங்குவது எளிதல்ல. பாலிலிருந்து தண்ணீரைப் பிரிக்கும் அன்னமாய் இந்த அன்னம் அவளின் வேலையை சிறப்பாய் செய்தது. ஒவ்வொரு நோயாளியின் கட்டிலில் தொங்கும் ரிப்போர்ட்டைப் படித்து அதில் கையொப்பொம் செய்கையில் அவளின் விரல்களிலிருந்து பேப்பருக்கு மின்சாரம் பாய்வது போல் ஓர் உணர்வு. 28 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக யாதிரா வளர்ந்திருந்தாலும் ஒவ்வொரு முடிவையும் இருமுறை யோசித்தாள். அவளின் திறமையும் எளிதாய் வந்தது அல்ல. இதற்கு அவளின் அத்தை மகன் ஆதவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.(அந்த கதையை இன்னொரு நாள் சொல்கிறேன்.)

மதியம் இரண்டு மணியைத் தொட மூச்சு வாங்கும் எண்ணத்தில் யாதிரா corridorஇல் இருந்த waiting area நாற்காலியில் சாய்ந்தது தான் தாமதம் எமெர்ஜன்சி வார்டில் இடி அரவம் போல் திடீர் ஆரவாரம் வெடித்தது. நாற்காலியிலிருந்து யாதிரா எழ முற்பட அவளின் தேய்ந்த பாதம் வலியில் கெஞ்சியது. தன் கீழ் இருக்கும் இரு ஜூனியர் ரெசிடன்ஸ்(junior residents) புதிய பேஷண்டை சோதனை செய்ததும் அவர்களை மேற்பார்வைப் பார்க்கலாமென திட்டமிட்டாள் யாதிரா. இவள் பயிற்சியளித்த மருத்துவர்கள் அல்லவா, அவ்விருவரும் முதற்கட்ட சோதனையை சிறப்பாக செய்வார்கள் என நம்பினாள் யாதிரா. தன் உடலை தன் வாழ்க்கை இலட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும் இக்கால்களுக்கு அவ்வப்போது கரிசணமும் நன்றியும் காட்டலாம், தப்பில்லை என தனக்குள் சிரித்துக்கொண்டு ஒவ்வொரு விரலையும் நீவினாள்.

யாதிரா (COMPLETED )Where stories live. Discover now